ஆப்நகரம்

மணமக்களை ஓரம் கட்டிய மலிங்கா...! திருமண மண்டபத்தில் ஐபிஎல் கொண்டாட்டம்...!

ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் நடக்கும்போது அந்த ரசிகர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது.

Samayam Tamil 14 May 2019, 3:23 pm
ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் நடக்கும்போது அந்த ரசிகர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது.
Samayam Tamil மணமக்களை ஓரம் கட்டிய மலிங்கா


இந்நிலையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடந்தது குறித்து உங்களுக்கு தெரியும். அதில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த சம்பவத்தின் போது மும்பையில் ஒரு தம்பதிக்கு திருமண வரவேப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின் போது திருமணத்திற்க வந்த விருந்தினர்கள் பார்ப்பதற்காக தனியாக பெரிய திரையில் ஐபிஎல் இறுதி போட்டி லைவ்வாக டிஸ்பிளே செய்யப்பட்டது.

இந்த போட்டியின் இறுதி பந்தில் சென்னை அணி 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பதற்றம் நிலவியது. அப்பொழுது அந்த திருமண வீட்டில் அனைவரும் திருமணத்தையும் மணமக்களையும் கவனிக்காமல் ஒரு நிமிடம் மெய் மறந்து கிரிக்கெட்டை கவனித்தனர். இறுதியாக மும்பை வெற்றி பெற்றதும் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி