ஆப்நகரம்

லிப் கிஸ் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அறுத்த கணவன்...!

குஜராத் மாநிலத்தில் தன்னிடம் சண்டைபோட்ட கணவன் மீண்டும் வந்து முத்தம் கேட்டபோது சமாதானம் செய்யதான் முத்தம் கேட்கிறார்கள் என் நினைத்து மனைவி முத்தம் கொடுக்க முயன்றபோது மனைவியின் நாக்கை கணவர் அறுத்துள்ளார்.

Samayam Tamil 12 Oct 2019, 1:57 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் தஸ்லீம் அன்சாரி. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அயுப் மன்சூரி வேலைக்குச் செல்லாமல் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம் சண்டை போட்டுள்ளார். தஸ்லீமிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அவரது கணவருக்கு தஸ்லீம் மூன்றாவது மனைவியாவார்.
Samayam Tamil லிப் கிஸ் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அறுத்த கணவன்


இந்த நிலையில் வேலைக்குப் போவதற்காக நடந்த இந்த சண்டை எல்லையை மீறிப் போக அயுப் கோபத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்குப் பின்பு வீட்டிற்குத் திரும்பிய கணவன் மனைவியிடம் லிப் கிஸ் கேட்டுள்ளார்.

Also : கணவன் கழிவறையில் இருந்து செல்பி எடுத்தால் மனைவிக்கு ரூ51 ஆயிரம் பரிசு வழங்கும் அரசு..!

தன்னிடம் சண்டை போட்டு விட்டதால் சமாதானம் செய்யத்தான் கேட்கிறார் என நினைத்து மனைவி கணவனின் அருகே ரொமான்ஸூடன் சென்றுள்ளார். அந்த நேரத்தில் கையிலிருந்த கத்தியை எடுத்து அயுப் அவரது மனைவி தஸ்லீமின் நாக்கை அறுத்துவிட்டார். இதனால் தஸ்லீமின் நாக்கு துண்டாகி விட்டது.

Read More: திருமணமாகி ஒரே மாதத்தில் 4 மாதம் கர்ப்பமான பெண் ; எங்கேயோ இடிக்குதே...

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது லிப்கிஸ் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை கணவர் துண்டாக்கிய செய்தி சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி