குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் தேவோ சவ்டா, இவரை தேவ்ஜி என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இவர் அப்பகுதியில் உள்ள பஜ்ரங்வாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு கடையில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு நாள் பஜ்ரங்வாடி போலீஸ் ஸ்டேஷனிற்கு தீ வைத்து வைத்து அங்கேயே நின்றார். போலீஸ் ஸ்டேஷன் தீ பற்றி எரிவதை பார்த்த போலீசார் தீயை அணைத்து விட்டு தேவ்ஜியை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் உள்ளே கூட்டி சென்றனர்.நல்லவேளையாக தீ பரவவில்லை. இந்நிலையில் போலீசார் அவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை நடந்து வந்தது. அந்த பிரச்சனை தன்னால் சமாளிக்க முடியவில்லை. தன்னை போலீசார் கைது செய்துவிட்டால் அதன் பின் தன் மனைவி சிறிது காலம் என் மீது பாவப்பட்டு என்னுடன் பிரச்சனை செய்யாமல் இருப்பார். அதனால் என் மனைவியிடமிருந்து தப்பிக்க போலீசில் சிக்க வேண்டும் என நினைத்தேன் அதற்காக தான் இப்படி செய்தேன் என கூறினார்.
இதை கேட்டு ஷாக் ஆன போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அரசு சொத்தை சேதமாக்கியதற்காக இவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைஅல்லது குறைந்தபட்சமாக அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தன் மனைவி சண்டை போடுவதால், அவரிடமிருந்து தப்பிக்க ஒருவர் போலீஸ் ஸ்டேஷனிற்கு தீ வைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
விசாரணையில் அவர் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை நடந்து வந்தது. அந்த பிரச்சனை தன்னால் சமாளிக்க முடியவில்லை. தன்னை போலீசார் கைது செய்துவிட்டால் அதன் பின் தன் மனைவி சிறிது காலம் என் மீது பாவப்பட்டு என்னுடன் பிரச்சனை செய்யாமல் இருப்பார். அதனால் என் மனைவியிடமிருந்து தப்பிக்க போலீசில் சிக்க வேண்டும் என நினைத்தேன் அதற்காக தான் இப்படி செய்தேன் என கூறினார்.
இதை கேட்டு ஷாக் ஆன போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அரசு சொத்தை சேதமாக்கியதற்காக இவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைஅல்லது குறைந்தபட்சமாக அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தன் மனைவி சண்டை போடுவதால், அவரிடமிருந்து தப்பிக்க ஒருவர் போலீஸ் ஸ்டேஷனிற்கு தீ வைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்