ஆப்நகரம்

நள்ளிரவில் பாத்ரூமிற்குள் புகுந்த முதலை...! அலறியடித்து எழுந்தவருக்கு அதிர்ச்சி...

குஜராத்தில் பாத்ரூமிற்குள் முதலை ஒன்று சென்ற சம்பவம் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகுிறது.

Samayam Tamil 7 Nov 2019, 5:47 pm
இந்தியாவில் முதலைகளின் எண்ணிக்கை மற்ற பல நாடுகளை ஒப்பிடுகையில் குறைவுதான். முதலைகளைப் பார்ப்பதே மிக அரிதான ஒரு விஷயம் ஆனால் இங்கு ஒருவர் வீட்டிற்கு முதலை வந்து பாத்ரூம் போன சம்பவம் நடந்திருக்கிறது தெரியுமா உங்களுக்கு? வாருங்கள் விவரமாக பார்க்கலாம்.
Samayam Tamil நள்ளிரவில் பாத்ரூமிற்குள் புகுந்த முதலை


குஜராத் மாநிலம் வதோதராவில் வசித்து வருபவர் மஹேந்திர பதியார். ஒருநாள் இரவு இவர் வீட்டில் தூங்கும்போது குளியலறையிலிருந்து சத்தம் வந்துள்ளது. அதில் உள்ளே 4.5 அடி நீள முதலை ஒன்று வாயைத் திறந்தபடி இருந்துள்ளது.

Also Read : 1300 கிலோ எடை கொண்ட எருமை மாடு...! தினம் என்ன சாப்பிடுகிறது என தெரிந்தால் தலை சுற்றி போவீர்கள்

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மஹேந்திரபதி உடனே கதவை மூடிவிட்டு அவர் தீயணைப்புத் துறைக்கு புகார் கொடுத்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவர் வீட்டில் இருப்பது மிக அரிய வகை ஆபத்தான முதலை என்பதால் அதை எடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு வீரர்கள் முதலையைப் பிடித்தனர். இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

அடுத்த செய்தி