ஆப்நகரம்

"சில்லறை இல்லையா? கீழ இறங்கு...!" மாற்றுத்திறனாளியை நடு வழியில் இறக்கிவிட்ட நடத்துனர்...!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா. மாற்ற திறனாளியான இவர் அரசு அலுவலக வாசலில் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்து சம்பாதித்து வருகிறார். அந்த வருமானத்தை கொண்டு தன் தங்கையை படிக்க வைத்தும் வருகிறார்.

Samayam Tamil 9 Mar 2019, 2:30 pm
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா. மாற்ற திறனாளியான இவர் அரசு அலுவலக வாசலில் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்து சம்பாதித்து வருகிறார். அந்த வருமானத்தை கொண்டு தன் தங்கையை படிக்க வைத்தும் வருகிறார்.
Samayam Tamil பஸ்சில் பாதி வழியில் இறக்க விடப்பட்ட பெண்


இந்நிலையில் இவர் ஸ்டேஷனரி பொருட்களை வாங்குவதற்காக திருப்பூரில் இருந்து கோவைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கோவையில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அவர் செல்லும் இடத்திற்கு டிக்கெட் கட்டணம் ரூ 6 ஆகும், அவர் நடத்துனரிடம் ரூ 10 கொடுத்துள்ளார். இதை கண்டு கோபமடைந்த நடத்துனர். சில்லறை இல்லை, பஸ்சில் ஏறும் போதே சில்லறை பெற்றக்கொண்டு ஏற வேண்டும் என தெரியாதா என கேட்டுவிட்டு அவரது டிக்கெட்டிற்கு பின்னால்
Read More: 84 வயது தாத்தாவிடம் விவாகரத்து கேட்ட பாட்டி... தாத்தா செய்த வேலைய கேட்டா ஆடிப்போயிருவீங்க

ரூ 1 அளித்தால் ரூ5 திருப்ப அளிக்கப்படும் என்ற குறியீட்டுடன் டிக்கெட்டை அளித்துள்ளார். அதற்கு சர்மிளா ரூ 6 டிக்கெட்டிற்கு ரூ 100 கொடுத்தால் நீங்கள் சில்லறை கேட்பதற்கு நியாயம் இருக்கிறது. நான் ரூ 10 தானே கொடுத்தேன். என கேட்டுள்ளார்.
Read More: ரூ 10 காயினே செல்லமாட்டேங்குது...! இதுல ரூ 20 காயின் வேற வருதாம்: நெட்டிசன்கள் கிண்டல்
இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர். "பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு திமிரா" என கேட்டு அவரை திட்டி பாதி வழியில் அவரை பஸ்சில் இருந்து இறக்கவிட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த சர்மிளா கோவை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீருடன் சென்று புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் மகளிர் தினத்தன்று நடந்தது. இந்தியாவில் மகளிரின் உண்மையான நிலைமையை கண்ணாடியாக காட்டும் சம்பவமாக நிகழ்ந்துள்ளது.
Read More: பப்ஜி மோகத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்...!

எனினும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடத்துனரிடமும் நாம் என்ன நடந்தது என கேட்க வேண்டும். அதுவே மிக சரியானதாக இருக்கும். பஸ்சிற்குள் என்ன நடத்திருந்தாலும் அந்த பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்டிருந்தால் அது நிச்சயம் மனித தன்மையற்ற செயலாகவே இருக்கும்.

அடுத்த செய்தி