Happy Shivaratri 2021 ம் ஆண்டிற்கான பிப்.21ம் தேதி நாடுமுழுவதும் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாட்டில் உள்ள அத்தனை சிவாலயங்களும் இரவு முழுவதும் திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேக, அங்கார வழிபாடுகள் நடக்கும்.
அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபாடு செய்வார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் வாழ்வில் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மக்கள் எல்லாம் அன்று இரவு சிவன் கோவிலிலேயே இருப்பார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் எந்த விழா வந்துவிட்டாலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வாழ்த்துக்களும் அதிகமாகப் பகிரப்படுகிறது. இப்படியாக சில புகைப்படங்களை உங்களுக்காக வாட்ஸ் அப், பேஸ்புக், மற்றும் பல இடங்களில் பகிர உங்களுக்காக சிவ முழக்கங்களையும் புகைப்படங்களையும் வழங்கியுள்ளோம். இதைக் கீழே காணுங்கள்
சிவ முழக்கங்கள் :
அரகர மகாதேவ நமக
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!
இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளுந் தானும் உடனே காண்க!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
புகைப்படங்கள் :
அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபாடு செய்வார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் வாழ்வில் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மக்கள் எல்லாம் அன்று இரவு சிவன் கோவிலிலேயே இருப்பார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் எந்த விழா வந்துவிட்டாலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் வாழ்த்துக்களும் அதிகமாகப் பகிரப்படுகிறது. இப்படியாக சில புகைப்படங்களை உங்களுக்காக வாட்ஸ் அப், பேஸ்புக், மற்றும் பல இடங்களில் பகிர உங்களுக்காக சிவ முழக்கங்களையும் புகைப்படங்களையும் வழங்கியுள்ளோம். இதைக் கீழே காணுங்கள்
- சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை.
- திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.
- திருமுறையே வாழ்வியல் வெளிச்சம்.
- திருமுறையே வாழ்வின் நெறிமுறை.
- திருமுறையே சைவ நெறிக் கருவூலம்.
- 63 நாயன்மார்களே நமது வாழ்வின் வழிகாட்டி
- நால்வர் நெறியே நமது கொள்கை.
- இறைவன் ஒருவன் ஒருவனே. அவனே சிவபெருமான்.
- ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியே சிவம்.
- காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
- அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.
- மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
- அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.
- சிவசிவ என்றிட தீவினை மாளும்
- நாதன் நாமம் நமசிவாயவே.
- ஆளாவது எந்நாளோ திருக்காளத்தி அப்பனுக்கே
- 63 நாயன்மார்கள் மலரடிகள் போற்றி போற்றி
- நால்வர் மலரடிகள் போற்றி போற்றி
- சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி போற்றி
- திருக்கோவில் தூய்மை செய்வோம். அகக்கோவில் தூய்மை அடையும்.
- சைவ சமயமே உலகின் சமயம்.
- தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
- கங்காளன் பூசும் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே.
- மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.
- பன்னிரு திருமுறையே தமிழ் வேதம்.
- கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே.
- பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் ஒருவனே இறைவன்.
- சிவாயநம என்பாரை அபாயம் என்றும் நெருங்காது.
- இறைவன் உயிர்களோடு ஒன்றாய் உடனாய் வேறாய் இருக்கிறான்.
- மானுடப் பிறவி சிவபெருமானைத் தொழுவதற்கே.
- உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சிவபெருமான்
- சிவாலயங்களை சேவிப்போம். செல்வம் வளரும் குறையாது.
அரகர மகாதேவ நமக
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!
இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளுந் தானும் உடனே காண்க!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
புகைப்படங்கள் :