ஆப்நகரம்

Honest Driver : உலகத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... நம்புங்கள்...!

மலேசியாவில் காரில் தெரியாமல் லேசாக மோதிவிட்டதால் அந்த சேதத்திற்காக பணத்தையும் மன்னிப்பு கடிதத்தையும் ஒரு நபர் வைத்து சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Oct 2019, 2:59 pm
காரில் ஒரு கோடு விழுந்துவிட்டால் அதைச் சரி செய்ய எவ்வளவு செலவாகும் என்பது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் பொது இடங்களுக்கு காரில் செல்பவர்கள் அதைப் பத்திரமாக பார்க் செய்யப் படாத பாடு படுவார்கள். அப்படியிருந்தும் சிலர் பார்க்கிங்கில் காரி நிறுத்தியிருந்தும் யாராவது சேட்டை செய்து காரில் கோடு போட்டு விடுவார்கள். சிலர் தாங்களே காரை எடுக்கும்போது கோடு போட்டு அவர்கள் கண்ணில் படும் முன்பு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
Samayam Tamil உலகத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்


மலேசியாவைச் சேர்ந்த ஹிர் நிஸாம் நஸினின் என்பவர் தன் காரை ஒரு வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டுத் திரும்ப வந்து பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Also Read : இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் "பாகிஸ்தான்" ; ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

அவர் வெளியே வந்து பார்த்தபோது அவரது காரில் ஒரு கீறல் இருந்தது. மேலும் அவரது கார் கண்ணாடியில் ஒரு லெட்டருடன் 100 மலேசியன் ரிங்கட்(இந்திய மதிப்பில் சுமார் ரூ1700) இருந்தது.

மேலும் அந்த கடிதத்தில் : "தெரியாமல் உங்கள் காரை அடித்துச் சேதப்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டு உங்கள் காரில் உள்ள ஸ்காரட்சை சரி செய்து கொள்ளுங்கள்" என குறிப்பிட்ட பட்டிருந்தது.

Also Read : விமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா? - வைரலாகும் புகைப்படம்

இதை நிஸாம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி