ஆப்நகரம்

Free Food : மாமியார் -மருமகளுக்கு 50% ஆஃபர், ஊட்டிவிட்டு சாப்பிட்டால் முற்றிலும் இலவசம்

புதுவை ஓட்டலில் மாமியார் மருமகளுக்கு ஆஃபர், திருக்குறள் சொன்னால் பிரியாணி இலவசம் என பல வித்தியாசமாக ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Mar 2020, 10:30 am
புதுச்சேரி மாநிலம் நோணங்குப்பம் சுண்ணாம்பற்று பகுதியில் உள்ள படகுத்துறை அருகே ஒரு உணவகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அந்த கடையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.
Samayam Tamil pondy hotel


இந்த கடைக்குச் சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்குப் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 அசைவ உணவுகள் இலவச விருந்தாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா?

மேலும் மாமியார் - மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கட்டணமும், இவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுச் சாப்பிட்டால் அவர்கள் சாப்பிடுவது முற்றிலும் இலவசம் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட அன்றே 4 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கடையை எழுத்தாளர் ஞானபானுவின் மகன் நிருபன் நடத்தி வருகிறார். இவர் தனது தந்தையிடம் உள்ள தமிழ் ஆர்வத்தால் தூண்டப்பட்டு இந்த திருக்குறள் அறிவிப்பையும், மாமியார் மருமகள் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவும் அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி