ஆப்நகரம்

தன்னைத்தானே சாப்பிட்டுக்கொள்ளும் பாம்பு...! வைரலாகும் வீடியோ

பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சரணாலயத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 14 Aug 2019, 8:44 pm
பென்சில்வேனியா நாட்டில் ஊர்வன சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தி்ல பாம்பு, ஆமை, என ஊர்வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு இனபெருக்கம் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil தன்னைத்தானே சாப்பிட்டுக்கொள்ளும் பாம்பு


இந்த சரணாலயத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே விழுங்கும் அதிசெய நிகழ்வு நடந்துள்ளது. இதை பாம்பு வல்லுநரான ஜோதக்கர் என்பவர் தனது செல்போன் மூலம் பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.


மேலும் அவர் அந்த வீடியோவில் பொதுவாக பாம்புகளுக்கு பசி வரும்போது சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றால் வேறு பாம்புகளை சாப்பிடும். அப்படியாக குணம் கொண்ட பாம்புகள் சில நேரங்களில் தன் வாலை பார்த்து வேறு பாம்பு என நினைத்து அதை சாப்பிட முன்வரும் ஆனால் அது தன் உடல் தான் என உணர்ந்ததும் விட்டுவிடும். ஆனால் இந்த பாம்பு ஏதோ மன அழுத்ததில் இருக்கிறது. அதான் தன்னை தானே உண்ண முடிவு செய்து இதை செய்கிறது. என பேசினார்.

பின்னர் பாம்பு தன்னை தானே உண்மை தடுத்துவிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி