ஆப்நகரம்

மனைவியையே கள்ளகாதலியாக்கிய கணவன்...! கணவன் வலையில் விழுந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா?

திருமணமாகி சில நாட்களிலேயே இருவருக்கும் ஏதோ ஒரு வெறுப்பு வந்துவிட்டது. இருவருக்குள்ளும் கணவன் மனைவி உறவு முறை சரியாக இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியே ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் பேஸ்புக்கில் போலியான ஐடி ஒன்றை துவங்கி அதன் மூலம் மற்றவர்களிடம் பேசி வந்தனர்.

Samayam Tamil 26 Jun 2019, 7:11 pm
உ.பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியாராக வேலை பார்க்கும் ஒருவர் அவர் வேலை பார்க்கும் பள்ளி இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து சில காலம் தம்பதிகள் சந்தோஷமாக இருந்தாலும் வெகு நாட்கள் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை.
Samayam Tamil மனைவியையே கள்ளகாதலியாக்கிய கணவன்


திருமணமாகி சில நாட்களிலேயே இருவருக்கும் ஏதோ ஒரு வெறுப்பு வந்துவிட்டது. இருவருக்குள்ளும் கணவன் மனைவி உறவு முறை சரியாக இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியே ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் பேஸ்புக்கில் போலியான ஐடி ஒன்றை துவங்கி அதன் மூலம் மற்றவர்களிடம் பேசி வந்தனர்.

நாம் ஒன்று நினைத்தால் ஆண்டவன் வேறு ஒன்று நினைப்பான் என சொல்வார்கள் அல்லவா அதே போல தான் இவர்கள் பேஸ்புக்கில் தனக்கு ஏதோவது துணை கிடைக்குமா என தேட துவங்கியபோது கடவுள் கணவனின் போலி பேஸ்புக் ஐடியையும், மனைவியின் போலி பேஸ்புக் ஐடியையும் நண்பர்களாக்கிவிட்டார்.

பின்னர் கணவனும் மனைவியும் தங்களது போலி பேஸ்புக் ஐடி மூலம் ஒருவருக்கொருவர் பேசி பழக துவங்கினர். கணவர் பள்ளிக்கு சென்றதும் மனைவி தனது பேஸ்புக் ஐடி மூலம் கள்ளகாதலனா கணவனுக்கும், கணவன் பள்ளியில் வைத்து தனது கள்ளக்காதலியான மனைவிக்கும் தொடர்பு கொண்டு சேட் செய்து பேச துவங்கினர்.

ஒரு கட்டத்தில் போலி கணக்கில் வளர்ந்த இவர்களது நட்பு காதலாக மாறியது. அதாவது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கள்ளக்காதல் செய்ய துவங்கினர். பேஸ்புக் சேட்டிலேயே தனது கள்ளக்காதலை தொடர்ந்த கணவன் மனைவி தங்கள் கள்ளக்காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நேரில் சந்திக்க திட்டமிட்டு ஒரு லாட்ஜில் சந்திக்க முடிவு செய்தனர்.

லாட்ஜில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தான் தெரிந்தது இவர்களும் தன் மனைவி/கணவனை தான் போலி பேஸ்புக் அக்கவுண்டில் காதலித்து வந்துள்ளோம் என்பது தெரியவந்தது. அப்புறம் என்ன இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சண்டைபோட்டு ரோட்டில் உருண்டு கொண்டனர். அதுவரை அவர்கள் இருவருக்குள் மட்டுமே இரந் இந்த விஷயம் வெளி உலகிற்கு வந்துவிட்டது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் போலி பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் கள்ளக்காதல் செய்து கொண்ட சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி