ஆப்நகரம்

நெரிசலான சாலை, ஆம்புலன்ஸ்'க்கு வழிவிட 2 கி.மீ ஓடிய டிராபிக் போலீஸ், வைரல் வீடியோ!

2 கி.மீ தூரம் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுக்க ஓடி சென்ற ஐதராபாத் டிராபிக் போலீஸ் பாப்ஜி வைரல் வீடியோ.

Samayam Tamil 5 Nov 2020, 1:30 pm
காவல் துறையில் மனவுளைச்சல் மற்றும் உடல் உளைச்சல் மிகுந்த துறை சாலை பாதுகாப்பு துறையான டிராபிக் தான். பொதுவாகவே டிராபிக் போலீசார் சொல்வதை மக்கள் பெரிதாக கேட்கமாட்டார்கள். போலீஸ் ஓரமாக நிற்கிறார் என தெரிந்தால், உடனே முந்தியடித்து கொண்டு, சாலைவிதிகளை மீறி சீறிப்பாய தான் முயல்வார்கள். வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்ய வேண்டிய கடமையில் இருப்பவர்கள் டிராபிக் போலீசார்.
Samayam Tamil hyderabad traffic police runs 2 kilometer to make a way for an ambulance in a busy road
நெரிசலான சாலை, ஆம்புலன்ஸ்'க்கு வழிவிட 2 கி.மீ ஓடிய டிராபிக் போலீஸ், வைரல் வீடியோ!


சமீபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த டிராபிக் போலீஸ் ஒருவர் அபிட்ஸ் சாலையில் இருந்து கோட்டி சாலை வரை ஏறத்தாழ 2 கி.மீ தூரம், நெரிசல் மிகுந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவகுக்க ஓடி சென்றுள்ளார். இந்த சம்பவம் சார்ந்த வீடியோ கடந்த புதன் (04-11-2020) அன்று வைரலாக நெட்டில் பரவியது.

வீடியோவில் பதிவாகி இருந்த அந்த டிராபிக் போலீஸ் பெயர் பாப்ஜி என்று அறியப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த திங்கள் (02-11-2020) அன்று அபிட்ஸ் ஜிபிஓ சிக்னல் அருகே நடந்துள்ளது. பொதுவாகவே அபிட்ஸ் சாலை முதல் கோட்டி சாலை வரை வாகன நெரிசல் மிகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெரிசலான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது, அப்போது டிராபிக் போலீஸ் பாப்ஜி, சமயோஜிதமாக சிந்துத்து, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன் ஓடி, வாகன நெரிசலை சரிசெய்து, வழிவகுத்து கொடுத்துள்ளார். ஆனால், பாப்ஜி ஓடிய தூரம் தான் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஏறத்தாழ 2 கிமீ தூரம் ஆம்புலன்ஸ் முன்னே ஓடியுள்ளார் பாப்ஜி.

பாப்ஜி வீடியோ:

ஆம்புலன்சில் பயணித்த யாரோ ஒருவர் தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். ஜிபிஓ சிக்னல் பகுதியில் இருந்து, ஆம்புலன்ஸ் முன்னே ஓடி, வழிவிடாத வாகன ஓட்டிகளை எல்லாம் ஓரம் போக சொல்லி கொண்டே, வழிவகுத்து கொடுத்துள்ளார் பாப்ஜி. பாப்ஜியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சில வாகன ஓட்டிகள், அந்த இடத்திலேயே கைத்தட்டி பாப்ஜிக்கு உற்சாகம் அளித்தனர்.

தனது செயலுக்கு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது என்று பாப்ஜி, பேட்டியில் கூறி இருந்தார். மேலும், அந்த ஆம்புலன்ஸில் இருந்த நபர்யார் என்று கூட நான் விசாரிக்கவில்லை. அம்புலன்சுக்கு வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது என்றும், பாப்ஜி கூறி இருந்தார்.

என் வீட்டை சேர்ந்த யாரேனும் அந்த ஆம்புலன்சில் இருந்தால், எப்படி இருக்குமோ, அப்படி தான் நான் உணர்ந்தேன் என பாப்ஜி கூறி இருந்தார். ஐதராபாத் அடிஷனல் கமிஷனர் அணில் குமார் பாராட்டி ட்வீட் போட்டிருக்கிறார். மேலும், பல்வேறு சீனியர் காவல் அதிகாரிகள் பாப்ஜிக்கு தங்களது பாராட்டுகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், இன்று பாப்ஜி அவர்களுக்கு நேரில் பாராட்டுகள் தெரிவித்து ஐதராபாத் காவல் துறை கௌரவித்துள்ளது.

அடுத்த செய்தி