ஆப்நகரம்

ரூ9 ஆயிரம் கடனை திரும்ப அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக அதே பகுதியில் இருந்த ஒருவரின் ரூ9 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அதை திரும்ப தர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 26 Apr 2019, 6:01 pm
இந்தியாவில் 70 சதவீதமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின் படி கடந்த 2017ம் மற்றும் 2018ம் ஆண்டுகளில் சராசரியாக தினமும் 10 விவசாயிகள் வரை தற்கொலை செய்துகொள்கின்றனர்.
Samayam Tamil தற்கொலை செய்து கொண்ட விவசாயி


இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் அக்டு வுக்கே இவர் கடந்த தனது மகளின் திருமணத்திற்காக அதே பகுதியில் இருந்த ஒருவரின் ரூ9 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். அவரால் அதை திரும்ப பெற முடியவில்லை.

இந்நிலையில் 4 ஆண்டுகளாக விவசாயம் எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சலை தரவில்லை இதனால் அவர் கஷ்டத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஒரு நாள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அவரது மனைவி கூறும் போது : "கடனை விட அவருக்கு விவசாயத்தில் சரியான வருமானம் இல்லை என்பது தான் அவருக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் தற்கொலை செய்து கொண்டார். தற்போது எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் எங்களுக்காக இருப்பான் என நம்புகிறோம். எங்கள் கடனையும் அடைத்து எங்கள் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்டு எடுப்பான். " என கூறினான்.

அடுத்த செய்தி