ஆப்நகரம்

Mirage 2000: பாலகோட் தாக்குதலின் போது பிறந்த குழந்தைக்கு "மிராஜ் சிங்" என பெயர் வைத்த பெற்றோர்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று தீவிரவாத முகாம்களை அடித்தது. இதற்காக மிராஜ் 2000 என்ற போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. தாக்குதல் நடந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு "மிராஜ் சிங்" என பெற்றோர் பெயர் வைத்தனர்.

Samayam Tamil 28 Feb 2019, 6:13 pm
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று தீவிரவாத முகாம்களை அடித்தது. இதற்காக மிராஜ் 2000 என்ற போர் விமானம் பயன்படுத்தப்பட்டது.
Samayam Tamil பாலகோட் தாக்குதலின் போது பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் என பெயர் வைத்த பெற்றோர்


இந்த செய்தி இந்திய மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியா தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் நாகரூர் மாவட்டத்தில் உள்ள டப்டா என்ற கிராமத்தில் மகவீர் சிங் - சோனம் ஆகிய தம்பதிக்கு குழந்தை பிறந்தது.
Read More: கூகுளில் இந்திய விமானப்படையை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்...!

மகவீர் சிங்கின் குடும்பத்தினர் பலர் தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்னறர். இதனால் இவர்கள் குடும்பம் ராணுவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு மற்றும் பக்தியும் அதிகம் இருந்தது.

இந்நிலையில் சரியாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடந்த சமயத்தில் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்த மகவீர் தனது குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோட் என பெயரிட்டுள்ளார்.
Read More: இந்தியாவை தொட்டால் பாக்., நொடிப்பொழுதில் காலி...! : முஷரஃப்


இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி