ஆப்நகரம்

ஓட்டுபோட ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது... ஏன் தெரியுமா?

இந்தியாவில் லோக்சபா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தான் ஓட்டுபோடுவதற்காக இந்தியா வருவதை சமூகவலைதளத்தில் அறிவித்ததால் அவருக்கு நேர்ந்த கதி தெரியுமா?

Samayam Tamil 15 Apr 2019, 2:46 pm
கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஜாய்ஸ்டன் லோபா, இவர் ஓமனில் பணியாற்றி வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் இவர் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
Samayam Tamil ரூ21 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் எடுத்தவரின் டிக்கெட் திடீரென கேன்சல் ஆனது


இதையடுத்து அவர் கடந்த மார்ச் 29ம் தேதி ஓமனில் இருந்து இந்தியா வருவதற்கு விமான டிக்கெட்களை புக் செய்தார். அதன் பின் அவர் அந்த டிக்கெட்டை வைத்து ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.
Read More: பிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சில் துப்புவதால் வந்த விணை..!

அந்த வீடியோவில் அவர் தான் வாக்களிப்பதற்காக ஓமனில் இருந்து இந்தியா வரவுள்ளதாகவும், மக்கள் அனைவரும் எந்த வேலை இருந்தாலும் வாக்களிக்கும் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும் அவர் அந்த வீடியோவில் தான் புக் செய்த டிக்கெட்டையும் காட்டியுள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களில் ஷேர் செய்தார்.

இந்நிலையில் ஜாய்ஸ்டனுக்கு தெரியாமலேயே அவர் புக் செய்த டிக்கெட்டை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி காலை 11.30மணிக்கு யாரோ கேன்சல் செய்து விட்டனர். டிக்கெட் கேன்சல் ஆன விஷயமே ஜாய்ஸ்டனிற்கு ஏப் 1ம் தேதி தான் தெரியும். அவர் டிக்கெட்டிற்காக ரூ21 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

ஆனால் டிக்கெட் கேன்சல் ஆன பின்பு அவருக்கு ரூ9 ஆயிரம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. அவர் பதிவிட்ட வீடியோவில் தான் ஒரு கட்சியை ஆதரிப்பதாகவும் அதற்கு வாக்களிக்க விரும்புவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் தான் அவரது ஆதரவு கட்சியை பிடிக்காத யாரோ சிலர் அவர் வாக்களிப்பதை தடுக்க இதை செய்ததாக கூறப்படுகிறது.
Read More: தேர்தல் உற்சாகத்தில் "நாகினி டான்ஸ்" ஆடிய அமைச்சர்...!

அதன் பின் அவர் மீண்டும் வேறு ஒரு டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கும் வந்துவிட்டார். தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் வளர்ச்சிக்காகவே பயன்படும் என நாம் நினைக்கிறோம், ஆனால் அதில் இருக்கும் சிக்கல்களை இன்னும் நாம் அறிந்து கொள்ளவில்லை. விமான டிக்கெட்டில் உள்ள பிஎன்ஆர் நம்பரை கொண்டு யார் வேண்டுமானாலும் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி அவரது டிக்கெடை மற்றவர்கள் கேன்சல் செய்ய வாய்ப்புள்ளது என்பதே அவர் அந்த வீடியோவை எடுக்கும் போது உணர்ந்திருக்கவேயில்லை.

நீங்களும் உங்கள் விமான டிக்கெட்களை பொதுவெளியில் ஷேர் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

அடுத்த செய்தி