ஆப்நகரம்

சாப்பாட்டிற்கு சண்டை போட்டதால் நின்று போன திருமணம்; சினிமாவை மிஞ்சிய கூத்து

திருமணம் என்றால் பெண் வீட்டு உறவினர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டு உறவினர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள் நடப்பது பெரும்பாலும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும். தென் மாவட்டங்களில் இது போன்ற சண்டைகள் சாதாரணம். குறிப்பாக உணவு விஷயத்தில் தான் சண்டையே வரும்.

Samayam Tamil 28 May 2019, 3:50 pm
திருமணம் என்றால் பெண் வீட்டு உறவினர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டு உறவினர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள் நடப்பது பெரும்பாலும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும். தென் மாவட்டங்களில் இது போன்ற சண்டைகள் சாதாரணம். குறிப்பாக உணவு விஷயத்தில் தான் சண்டையே வரும்.
Samayam Tamil சாப்பாட்டிற்கு சண்டை போட்டதால் நின்று போன திருமணம்


உ.பி. மாநில லஷ்மிபூர்கேரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் பெண்ணின் வீட்டாருக்கும் மாப்பிள்ளையின் வீட்டாருக்கும் உணவு விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் திருமணமே நின்று போனது.

மணப்பெண்ணின் குடும்பம் பண கஷ்டத்தில் இருப்பதால் இந்த திருமணத்தை மிக சிறிய அளவில் திட்டமிடனர். இந்த திருமணத்திற்கு மொத்தமே 50 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வந்தவர்களை சிறப்பாக கவனிக்க அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு 60-70 பேர் வரை வந்துவிட்டனர். அதனால் வந்தவர்களுக்கு உணவு வழங்க போதுமான உணவு தயார் செய்யப்படவில்லை.

இதை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்தபோது இரு வீட்டாருக்கும் இடையே பெரும் பிரச்சனையே ஏற்பட்டு விட்டது. இந்த பிரச்சனை வாய் தகராறாகி பின்னர் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார் இரு வீட்டாரையும் பிரித்து வைத்தனர். இறுதியாக இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்தி விட்டு சென்றனர்.

அடுத்த செய்தி