ஆப்நகரம்

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு ஜெயில்...! தயாரானது சட்ட முன்வடிவம்....!

பீகார் மாநிலம் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் புதிய சட்ட முன் வடிவு ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன் படி வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு சிறை தண்டனை கிடைக்கும் சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jun 2019, 4:50 pm
பீகார் மாநிலம் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் புதிய சட்ட முன் வடிவு ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன் படி வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு சிறை தண்டனை கிடைக்கும் சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு ஜெயில்


பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக முதியோர்களை கைவிடும் அவலம் நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் நடந்தது. இதை கருத்தில் கொண்டு சட்டமுன்வரைவிற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தன்னுடைய சொந்த பிள்ளைகளால் கைவிடப்படும் மற்றும் பாதிக்கப்படும் பெற்றோர்கள் புகார் அளித்தால் அந்த பிள்ளைகள் மீது உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு முடிவெடித்துள்ளது. வயதான பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் ஒழுங்காக கவனிக்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி