ஆப்நகரம்

ரூ13 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்...! என்ன மீன் தெரியுமா?

ஜப்பானில் உள்ள மீன் மார்கெட்டில் அரியவகை மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது அது ரூ13 கோடிக்கு ஏலத்திற்கு போயுள்ளது.

Samayam Tamil 6 Jan 2020, 11:47 am
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டொயோசு என்ற பகுதியில் மீன் சந்தை ஒன்று இயங்கி வருகிறது. அங்குக் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ஏலத்திற்குக் கொண்டு வரப்படும். இப்படியாக இந்த புத்தாண்டையொட்டி ஒரு மெகா சைஸ் மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது.
Samayam Tamil japan fish market auctioned huge tuna fish for 1 3 million dollars
ரூ13 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்...! என்ன மீன் தெரியுமா?


இந்த மீன் ஏலமிடப்பட்டது. இந்த மீன் சுமார் 276 கிலோ எடை கொண்ட அரிய வகை டுனா ரக மீன் என்பதால் இதை வாங்குவதற்குக் கடுமையான போட்டியிருந்தது.பலர் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இதையடுத்து கியோஷி கிமுரா என்பவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார்.

Also Read : இந்திய கப்பலை தாக்க வந்த நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந்திய கடற்படை... அடுத்து நடந்தது?

எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தார் தெரியுமா? 193.2 மில்லியன் யென் அதாவது 1.8 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ13 கோடியாகும். இந்த மீனை ஏலத்திற்கு எடுத்தவர் அதைத் தனது ரெஸ்டாரெண்டில் உணவிற்காகப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்தார்.

இந்த சந்தையிலேயே இரண்டாவது அதிக விலைக்கு விற்பனையான மீனாக இந்த மீன் கருதப்படுகிறது. இந்த டுனா வகை மீன் வடக்கு அமோரி பிரிஃபெக்ச்சர் பகுதியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி