ஆப்நகரம்

காதலுக்கு ஓகே சொன்ன மறுநொடியில் விபரீதம், உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலன்!

காதலை சொல்வதற்காக மலைக்கு சென்று இறுதியில் பேராபத்தில் முடிந்தது இந்த காதல் திட்டம்.

Samayam Tamil 6 Jan 2021, 3:59 pm
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தது. ஆஸ்திரேலியாவில் கரிந்தியாவில் உள்ள 27 வயது இளைஞரும் அவரது 32 வயது காதலியும் பயணம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பால்கர்ட் என்னும் மலைக்கு சென்றனர்.
Samayam Tamil காதலுக்கு ஓகே சொன்ன மறுநொடியில் விபரீதம், உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலன்!


அந்த இளைஞர் அங்கு சென்று தன் காதலியிடம் காதலை தெரிவிக்க நினைத்துள்ளார். எனவே அந்த மலையின் கூம்பு பகுதிக்கு காதலியை அழைத்து சென்றுள்ளார். அங்கே சென்றவுடன் தனது காதலை அவர் தெரிவித்தார். ஆனால் காதலை தெரிவித்த மறுகணமே அந்த பெண் நின்ற பாறை சரிந்து அவர் விழ துவங்கினார்.

இதை கண்ட இளைஞர் அந்த பெண்ணை காப்பாற்ற தனது கையை கொடுத்துள்ளார். ஆனால் துர்திருஷ்டவசமாக அந்த பெண் 650 அடி ஆழத்தில் போய் விழுந்தார். அவரை காப்பாற்ற முற்பட்ட இளைஞரும் 50 அடி ஆழத்தில் சென்று விழுந்தார். காதலை சொல்வதற்காக காதலியை அழைத்து சென்று இறுதியில் அது விபத்தில் முடிந்தது.

ஆனால் அந்த மலை முழுவதும் பனி என்பதால் அவர்கள் இருவருக்குமே பெரிதாக காயங்கள் ஏற்படாமல் பனியில் விழுந்து தப்பினர். அங்கு வந்த வழிப்போக்கர் ஒருவர் அவர்கள் இருவரும் அசைவில்லாமல் கிடப்பதை கண்டு அவசர சேவைக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

பிறகு மீட்பு பணியாளர்கள் வந்து அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்கள் இருவரும் மிக அதிர்ஷ்ட சாலிகள். இல்லையென்றால் 650 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அந்த பெண் தப்பித்திருக்க முடியுமா? அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போயிருந்தால் கதை வேறு மாதிரியாக மாறியிருக்கும் என்கிறார் சம்பவ இடத்தில் இருந்த போலீஸார்.

இருவரும் தற்சமயம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த இளைஞருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும் இருவரும் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பித்தனர். அந்த இளைஞர் காதலை வெளிப்படுத்திய தினத்தை அந்த பெண் இனி தன் வாழ்நாளில் மறக்க மாட்டார் என நம்புவோம்.

அடுத்த செய்தி