ஆப்நகரம்

மனைவி மற்றும் கள்ளகாதலியுடன் சென்னையில் ஒரே ரூம் போட்டு தங்கிய ஆசிரியர்....! என்ன நடந்தது தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகத் பிராங்கிளின் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி புனிதா ராணி என்ற மனைவியும், 6 வயதில் ஜெசிபி என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

Samayam Tamil 12 Jun 2019, 3:56 pm
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகத் பிராங்கிளின் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி புனிதா ராணி என்ற மனைவியும், 6 வயதில் ஜெசிபி என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
Samayam Tamil மனைவி மற்றும் கள்ளகாதலியுடன் சென்னையில் ஒரே ரூம் போட்டு தங்கிய ஆசிரியர்


இந்நிலையில் இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சரண்யா என்ற பெண்ணிற்கும் கள்ள தொடர்பு இருந்தததாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளதொடர்பு விவகாரத்தில் பிராங்கிளினின் மனைவி புனிதா ராணிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிராங்கிளின் விடுமுறையில் வீட்டிற்கு வரும் நாட்களில் எல்லாம் பிராங்கிளின், புனிதா ராணி, சரண்யா மூவரும் இணைந்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கு தெரியவர விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து பிராங்கிளின், புனிதா ராணி, அவர்களின் குழந்தை ஜெசிபி, மற்றும் சரண்யா ஆகியோர் கன்னியாக்குமரியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.

சென்னையில் அவர்கள் ஒரு தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் காலையில் வெகு நேரமாகியும். அந்த ரூமில் இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ரூமிற்குள் நுழைந்து பார்த்த போது ரூமில் இருந்த பிராங்கிளின், அவரது மனைவி புனிதா ராணி, சரண்யா, மற்றும் 6 வயது குழந்தை ஜெசிபி ஆகியோர் மயங்கி கிடந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் பிராங்கிளின் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். புனிதா ராணி, சரண்யா, ஜெசிபி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதில் ரூமிற்குள் என்ன நடந்தது. இவர்கள் ஏன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து புனிதா ராணி அல்லது சரண்யா ஆகியோரில் யாராவது ஒருவராவது கண் விழித்து வாக்கு மூலம் அளித்தால் மட்டுமே தெரியவரும்.

அடுத்த செய்தி