ஆப்நகரம்

Thiruvattar marriage Food :கன்னியாகுமரியில் நடந்த திருமணத்தில் மண்சட்டி உணவு விருந்து ; இயற்கை விரும்பும் இளைஞர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே நடந்த திருமணத்தில் மணமக்கள் மண்சட்டியில் உணவருந்தி மண்பாண்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.

Samayam Tamil 20 Sep 2019, 3:18 pm

கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மக்கள் பலர் பாராம்பரிய முறையை பின்பற்றி தங்கள் திருமணத்தை நிகழ்த்தும் டிரெண்டை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதி மாட்டு வண்டியில் சென்று தங்கள் திருமணத்தைச் செய்துகொண்டனர். அதேபோல தற்போது வேறு ஒரு தம்பதியும் வித்தியாசமான முறையில் பாரம்பரியத்தை பின்பற்றி தங்கள் திருமண நிகழ்வை செய்திருக்கிறார்.
Samayam Tamil மண்சட்டி உணவு


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு கல்லாம் பொற்றையைச் சேர்ந்தவர் சுஜின் இவருக்கும் புலிப்பனத்தை சேர்ந்த அனுஷாவுக்கும் திருமணம் நடந்தது. மண்டபத்தில் நடந்த திருமணத்தைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

கேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்...! ரூ 12 கோடி ஜாக்பாட்

பொதுவாக எல்லா திருமண வீடுகளிலும் உள்ள திருமண விருந்து போல தான் இந்த விருந்தும் வாழை இலையில் பரிமாறப்பட்டது.

ஆனால் மணமக்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு அவர்களுக்கு மண்சட்டியில் உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவைத் தான் மணமக்கள் சாப்பிட்டனர். பொதுவாகத் திருமண மணமக்கள் விருந்தினர்கள் சாப்பிட பின்பு தான் சாப்பிடுவார்கள்.

ஆனால் அவர்கள் பராம்பரிய முறையைப் பின்பற்றுவது தெரியவேண்டும் என்பதற்காக முதல் பந்திலேயே மணமக்கள் சாப்பிட வந்துவிட்டனர். இந்த நடைமுறையைப் பார்த்த விருந்தினர்கள் ஆச்சரியப்பட்டனர்.

கல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா? - வைரலாகும் திருமண பேனர்

இது குறித்து மணமக்கள் கூறும்போது : " மனிதர்களான நாம் கட்டாயம் இயற்கையை நேசிக்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாகத் தான் இதை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம். நாம் இயற்கையில் முறையிலிருந்து வாழ்க்கை மாற்றிக்கொண்டே வருகிறோம்.

பப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்?- விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மீம்ஸ்

இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை தான் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மண் பாண்டங்கள் இன்று புழக்கத்திலிருந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பிளாஸ்டிக் மற்றும் மற்ற உலோகங்களின் வருகை இன்று நம்மை அழிவு பாதையை நோக்கிக் கொண்டு செல்ல வைத்துவிட்டன. இதை மக்களுக்கு நினைவுபடுத்தவே உறவினர்கள் முன்னிலையில் மண்சட்டியில் சாப்பிட்டோம்." எனக் கூறினார்.

அடுத்த செய்தி