ஆப்நகரம்

தண்டவாளத்திற்கிடையில் படுத்து அடி படாமல் தப்பிய மூதாட்டி..! வைரலாகும் வீடியோ

கர்நாடாகாவில் மூதாட்டி ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது போது ரயில் வந்ததால தண்டவாளத்திற்கிடையில் படுத்து உயிர் தப்பிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 4 Sep 2019, 5:55 pm

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் சித்தாபுரா அருகே வசித்து வருபவர் 65 வயது மூதாட்டி முனிபாய். இவர் நேற்று முன் தனம் சித்தாபுரா ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பிளாட் பாரத்திலிருந்து வேறு பிளாட்பாரத்திற்கு செல்ல தண்டவாளத்தில் இறங்கினார்.
Samayam Tamil தண்டவாளத்திற்கிடையில் படுத்து அடி படாமல் தப்பிய மூதாட்டி


அப்பொழுது அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது அதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் சுற்றி இருந்தவர்கள் கவனித்து முனிபாய்யை பார்த்துக் கூச்சலிட்டனர். அதன் பின் சரக்கு ரயில் வருதை கண்டு சுதாரித்துக்கொண்டு ரயிலில் அடிபடாமல் தவிர்க்கத் தண்டவாளத்திற்கு இடையில் படுத்துக்கொண்டார். சரக்கு ரயில் அவர் மீது மோதாமல் சென்றுவிட்டது.
அமெரிக்கர்களிடம் குறும்பு செய்த எலிசெபத் ராணி - வைரலாகும் தகவல்

ரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ23 ஆயிரம் அபராதம்

ரயில் சென்ற பின்பு முனிபாய் தண்டவாளத்திலிருந்து எழுந்தார் அவருக்குச் சிறு கீறல் கூட ஏற்படவில்லை. சாவின் விளிம்பிற்குச் சென்ற மூதாட்டி எந்த விதமாகக் காயமும் இன்றி தப்பிய சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி