ஆப்நகரம்

புலியாக மாறிய நாய்... விவசாயத்தை பாதுகாக்க புதிய யோசனை...!

வயல்வெளிகளில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க நாம் சோழக்காட்டு பொம்மைகளை கட்டி வைப்போம். ஆனால் பன்றிகள் யானைகள், உள்ளிட்ட மிருகங்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முடியவில்லை. சிலர் இதற்காக கரெண்ட் வேலிகளை கட்டி வைக்கின்றனர். இதனால் அந்த வன விலக்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

Samayam Tamil 2 Dec 2019, 3:06 pm
வயல்வெளிகளில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க நாம் சோழக்காட்டு பொம்மைகளை கட்டி வைப்போம். ஆனால் பன்றிகள் யானைகள், உள்ளிட்ட மிருகங்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முடியவில்லை. சிலர் இதற்காக கரெண்ட் வேலிகளை கட்டி வைக்கின்றனர். இதனால் அந்த வன விலக்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
Samayam Tamil karnataka dog painted as tiger to scare monkeys by farmers
புலியாக மாறிய நாய்... விவசாயத்தை பாதுகாக்க புதிய யோசனை...!


புதிய யோசனை

சிலர் முள்வேலைகள் கட்டி வைக்கிறார்கள் யானைகளுக்கு முள்வேலிகள் எல்லாம் எம்மாத்திரம்? அதையும் உடைத்துவிட்டு வயல்வெளிகளை ஒரு பதம் பார்த்து விடுகிறது. இந்நிலையில் விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க கர்நாடக மாநில விவசாயின் ஒரு யோசனை தற்போது வைரலாகியுள்ளது.

நாய் வளர்ப்பு

கர்நாடகா மாநிலம் ஷீமோகா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா, இவர் தனது தோட்டத்தில் குரங்குள் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். குரங்குளை விரட்ட நாய்களை வளர்த்தார். ஆனால் குரங்குகள் மரத்தின் மீது ஏறி நாய்களை விரட்டியது இதனால் குரங்குகள் வராமல் எப்படி தடுக்கலாம் என பல முறை யோசித்தார் ஆனால் எதுவும் சிக்கவில்லை.

புலியாக மாறிய நாய்

இறுதியாக அவர் தனது நாய்களுக்கு உடம்பில் கோடுகள் போட்டு புலி போல தோற்றத்திற்கு மாற்றினார். இந்த யோசனை அவருக்கு உத்தர் கர்நாடகா பகுதிக்கு சென்றபோதுஅவர் ஒரு புலி பொம்மையை வைத்து ஒரு விவசாயி மற்ற விலங்குகளிடம் இருந்து பயிரை காப்பாற்றியதை அறிந்தார். பொம்மை என்றால் அசையாமல் இருக்கும் நாய் என்றால் அங்கும் இங்கும் ஓடும் இதனால் மற்ற விலங்குகள் தோட்டத்திற்கு பக்கம் வராது என எண்ணினார்.

வைரலாகும் செய்தி

அதனால் அவர் தனது நாய்க்கு புலி போன்ற பெயிண்ட் அடித்தும், அதே நேரத்தில் அதை புகைப்படம் எடுத்து அதை தோப்பில் பல பகுதிகளில் வைத்தும் உள்ளனர். இதானல் மற்ற விலங்குகள் இதைபார்த்து புலி நிற்பதாக பயந்து உள்ள வர பயந்து ஓடி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் தனது பயிர் மற்ற விலங்குகளிடம் இருந்து காப்பாற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி