இன்று நீங்கள் வெளியூருக்குச் சென்றாலும் யாரிடமும் வழிகேட்டுத் தான் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூகுள் மோப்பைத் திறந்துவிட்டால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என அது வழி காட்டி விடும்.
ஆனால் கூகுள் மேப் எப்பொழுதும் பயன் தராத சில நேரங்களில் நம்மைச் சிக்கலிலும் மாட்டிவிட்டு விடும். அப்படியாக ஒரு சம்பவம் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூருவிலிருந்து சிலர் சுற்றுலாவிற்காக ஊட்டிக்குப் பயணித்தனர். அவர் இரவு ஒரு இடத்தில் வேனை நிறுத்திவிட்டுச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் கூகுள் மேப் மூலம் வழியைப் பார்த்து அதன் படி வேனை இயக்கியுள்ளனர்.
கூகுள் மேப் காண்பித்த வழியில் செல்லும் போது பாதைகள் மிகவும் குறுகலாகவும் கடினமாகவும் இருந்துள்ளது. இருந்தாலும் இது தான் வழி என நினைத்து அவர்கள் தொடர்ந்து அந்த வழியிலேயே இயக்கிக் கொண்டிருந்தனர்.
Also See: இவ்வளவு அற்புதமான போட்டோஷாப் ஒர்க் பார்த்திருக்கவே மாட்டீங்க...!
பின்னர் ஒரு சரிவான பாதையை நோக்கி கூகுள் மேப் வழி காட்டியுள்ளது. அந்த பாதை வழியாகவும் அவர்கள் சென்றுள்ளது. சரிவான பாதையில் கீழே சென்ற போது அங்குப் பெரிய கம்பிகளுடன் தூண் கட்டப்பட்டு அப்படிச் செல்ல வழிகள் இல்லாமல் தடுக்கப்பட்டிருந்தது.
சரி என்று அவர்கள் வேனை ரிவர்ஸில் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் எடுக்க முடியவில்லை. செங்குத்தான பாதையாக இருந்ததால் கூடுந்து ரிவர்ஸ் கியரில் மேலே ஏற முடியவில்லை. வேலை திருப்பவும் வழியில்லை. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
இது இரவு நேரம் என்பதால் உதவிக்குள் ஆட்கள் கிடைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் வேனை அந்தப்பகுதியிலேயே நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கினர். பின்னர் காலை விடிந்ததும் வேலை க்ரேன் உதவியுடன் மீட்டு பின்னர் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
கூகுள் மோப்பைப் பார்த்துச் சென்றவர்கள் சிக்கிலில் சிக்கிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.
ஆனால் கூகுள் மேப் எப்பொழுதும் பயன் தராத சில நேரங்களில் நம்மைச் சிக்கலிலும் மாட்டிவிட்டு விடும். அப்படியாக ஒரு சம்பவம் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூருவிலிருந்து சிலர் சுற்றுலாவிற்காக ஊட்டிக்குப் பயணித்தனர். அவர் இரவு ஒரு இடத்தில் வேனை நிறுத்திவிட்டுச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் கூகுள் மேப் மூலம் வழியைப் பார்த்து அதன் படி வேனை இயக்கியுள்ளனர்.
கூகுள் மேப் காண்பித்த வழியில் செல்லும் போது பாதைகள் மிகவும் குறுகலாகவும் கடினமாகவும் இருந்துள்ளது. இருந்தாலும் இது தான் வழி என நினைத்து அவர்கள் தொடர்ந்து அந்த வழியிலேயே இயக்கிக் கொண்டிருந்தனர்.
Also See: இவ்வளவு அற்புதமான போட்டோஷாப் ஒர்க் பார்த்திருக்கவே மாட்டீங்க...!
பின்னர் ஒரு சரிவான பாதையை நோக்கி கூகுள் மேப் வழி காட்டியுள்ளது. அந்த பாதை வழியாகவும் அவர்கள் சென்றுள்ளது. சரிவான பாதையில் கீழே சென்ற போது அங்குப் பெரிய கம்பிகளுடன் தூண் கட்டப்பட்டு அப்படிச் செல்ல வழிகள் இல்லாமல் தடுக்கப்பட்டிருந்தது.
சரி என்று அவர்கள் வேனை ரிவர்ஸில் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் எடுக்க முடியவில்லை. செங்குத்தான பாதையாக இருந்ததால் கூடுந்து ரிவர்ஸ் கியரில் மேலே ஏற முடியவில்லை. வேலை திருப்பவும் வழியில்லை. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
இது இரவு நேரம் என்பதால் உதவிக்குள் ஆட்கள் கிடைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் வேனை அந்தப்பகுதியிலேயே நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கினர். பின்னர் காலை விடிந்ததும் வேலை க்ரேன் உதவியுடன் மீட்டு பின்னர் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
கூகுள் மோப்பைப் பார்த்துச் சென்றவர்கள் சிக்கிலில் சிக்கிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.