காதல் இன்று யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம் ஒரு காலத்தில் ஒரே தெருவில் ஒரே ஊரில் உள்ளவர் காதலித்தனர் பின்னர் போக்குவரத்து வசதி விரிவடைந்த போது
ஊர்விட்டு ஊர் காதலிக்க துவங்கினர். இன்று உலகம் தொழிற்நுட்பத்தால் இணைக்கப்பட்ட நிலையில் இன்று உலகில் எந்த மூலையில் உள்ளவர்களும் எப்படி வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இப்படியாக சமீபத்தில் ஒரு வித்தியாசமான காதல் கதை நடந்தள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஃபரீஜா, இவர் பப்ஜி விளையாடும் பழக்கம் உடையவர் இவர் பப்ஜி விளையாடும் போது மேற்கு வங்கம் துருப்குரி பகுதியை சேர்ந்த சாய்நூர் ஆலம் என்பவரை சந்திதுள்ளார். இருவரும் பப்ஜியில் பேசியது பிடித்து போக இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேச துவங்கியுள்ளார். செல்போனிலேயே பல மணி நேரம்பேசிய இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஃபரிஜா தன் காதலை காணவேண்டும் என விரும்பி பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மேற்கு வங்கம் சென்று அங்கு தன் காதலன் வீட்டு முகவரிக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அங்கு தன் காதலன் வந்து கதவை திறந்தபோது அவருக்கு பெரும் ஆச்சரியம், தனக்காக தன் ஆன்லைன் காதலி நேரில் வந்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார். தன் காதலனை பார்க்க காதலி வந்ததை அறிந்த காதலின் பெற்றோர் முறையாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
ஊர்விட்டு ஊர் காதலிக்க துவங்கினர். இன்று உலகம் தொழிற்நுட்பத்தால் இணைக்கப்பட்ட நிலையில் இன்று உலகில் எந்த மூலையில் உள்ளவர்களும் எப்படி வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.
இந்நிலையில் ஃபரிஜா தன் காதலை காணவேண்டும் என விரும்பி பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மேற்கு வங்கம் சென்று அங்கு தன் காதலன் வீட்டு முகவரிக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அங்கு தன் காதலன் வந்து கதவை திறந்தபோது அவருக்கு பெரும் ஆச்சரியம், தனக்காக தன் ஆன்லைன் காதலி நேரில் வந்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார். தன் காதலனை பார்க்க காதலி வந்ததை அறிந்த காதலின் பெற்றோர் முறையாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்