ஆப்நகரம்

மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்...! வைரலாகும் புரட்சிகர சம்பவம்

கர்நாடகா மாநிலத்தில் தன் மகன் இறந்துவிட்டதால் விதவையான மருமகளுக்கு மாமனாரே மறுமணம் செய்துவைத்த புரட்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 5:00 pm
கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள கேபாலகாஜி கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா இவருக்கும் குன்யக்கா மகன் மதவாவு என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இருவரும் திருமண வாழ்க்கையை இனிமையாக கழித்து வந்த சூழ்நிலையில், ஒரு வாகன விபத்தில் மாதவாவு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் சுசீலா வேறு கர்ப்பமாக இருந்தார்.
Samayam Tamil மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்


இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சுசீலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இளம் வயதிலேயே தன் மருமகள் விதவையானதை அவரது மாமியார் மாமனாரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதனால் அவர் தனது மருமகளுக்கு தானே வேறு மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதை முதலில் சுசீலாவின் மாமியார் தான் முன்மொழிந்துள்ளார். ஆனால் அதற்கு சுசீலா சம்மதம் தெரிவிக்கவில்லை. குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை காரணம் காட்டி மறுத்து வந்தார். இறுதியாக அனைவரும் சேர்ந்து சுசீலாவின் மனநிலையை மாற்றி மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

இதையடுத்து சுசீலாவிற்கு ஜெயபிரகாஷ் என்பவர் மாப்பிள்ளையாக பார்க்கப்பட்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது ஜெயபிரகாஷூடன் வாழும் சுசீலா குழந்தையையும் தன் பராமரிப்பிலேயே வைத்திருக்கிறார்.

மாமனாரே இளம் வயதில் விதவையான மருமகளுக்கு திருமணம் செய்து வைத்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புரட்சிகர மாமனாரை பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி