ஆப்நகரம்

50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்...!

கர்நாடகா மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து புதைக்கப்பட்டவர் தற்போது மீண்டும் உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 31 Oct 2019, 11:57 am
கர்நாடகா மாநிலம் சல்லகேரே தாலுகாவைச் சேர்ந்தவர் சன்னா ஏரண்ணா. இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது 30வது வயதில் இறந்துவிட்டார். இவரை அவரது உறவினர்கள் எடுத்துக்கொண்டு போய் புதைத்தனர்.
Samayam Tamil 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்


இந்நிலையில் அவர் 50 ஆண்டுகள் கழித்து தற்போது உயிருடன் உள்ளார் எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை இவர் கடந்த தீபாவளியன்று தன் வீட்டிற்கு உயிருடன் வந்துள்ளார்.

சுயநினைவை இழந்து ஆந்திராவில் ஏரண்ணா வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது அவரது உறவினர்கள் சிலர் ஆந்திராவிற்கு வேலை தேடிச்சென்றபோது ஏரண்ணாவை சந்தித்துள்ளனர். இவர் இறந்துபோன ஏரண்ணா தோற்றத்தில் இருந்ததால் அவரை பற்றி விசாரித்துள்ளனர்.

Watch : இப்படி ஒரு கேட்சை இன்டர்நேஷனல் மேட்சில் கூட பார்க்க முடியாது

அவர் தான் யாரென்றே தெரியாது நினைவுகளைத் தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பின் இது ஏரண்ணாவாகதான் இருக்கும் என எண்ணி அவரை அவரது குடும்பத்தினர் இருக்கும் வீட்டிற்குக் கூட்டி வந்துள்ளார்.

அங்கு ஏரண்ணாவின் குடும்பத்தினர் அவரை கண்டதும் மகிழ்ச்சியடைந்தனர். ஏரண்ணாவிற்கு அவரது குடும்பத்தினர் வீட்டைப் பார்த்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தது.

இருந்தாலும் இறந்ததாகப் புதைக்கப்பட்ட ஏரண்ணா அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்? அங்கிருந்து எப்படி ஆந்திரா சென்றார் என்ற விபரங்கள் தெரியவில்லை.

Also Read : ஹாலோவின் தினம்...! அப்படி என்றால் என்ன தெரியுமா?

வீட்டிற்கு வந்த ஏரண்ணா குடும்ப உறுப்பினர்களிடம் அவர் உயிருடன் இருந்த போது நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லியுள்ளார். குறிப்பாக அவருக்கும் அவர் மனைவிக்கும் மட்டும் தெரிந்த விஷயங்களைக் கூட சரியாகச் சொல்லியுள்ளார்.

இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சியமடைந்துஅவரை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர். தற்போது ஏரண்ணா 80வது வயதில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து அவரது மனைவியின் சொந்த ஊரான சித்ரநாயக்கனஹள்ளி என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

Also Read : உண்மையிலே தயாரானது அயன் மேன் ஆடை...! ரியல் ஹீரோவாகும் ராணுவ வீரர்கள்

இறந்ததாக 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி