ஆப்நகரம்

மனைவியை ஆன்லைன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்...! கேரளாவில் திடுக் சம்பவம்

தனக்கு செக்ஸ் மீது அதிக மோகம் இருந்ததாகவும், இதை தனது ஷேர்சாட் எனப்படும் சமூகவலைதளம் மூலம் கிடைத்த நண்பர்களிடம் பகிர்ந்ததாகவும். அவர்கள் தனது மனைவியை அனுபவிக்க விரும்பியதால் அவர்களுடன் மனைவியை பகிர்ந்து கொண்டதாகவும் ஒருவர் போலீீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Samayam Tamil 2 May 2019, 4:25 pm
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் தன் கணவர் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தன் கணவர் அவரது நண்பர்கள் 3 பேருடன் என்னை கட்டாயமாக உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவதாக என குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil மனைவியை ஆன்லைன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட கணவன்


இந்த புகாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது கணவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

அவர் அளித்த வாக்குமூலத்தின் படி தனக்கு செக்ஸ் மீது அதிக மோகம் இருந்ததாகவும், இதை தனது ஷேர்சாட் எனப்படும் சமூகவலைதளம் மூலம் கிடைத்த நண்பர்களிடம் பகிர்ந்ததாகவும். அவர்கள் தனது மனைவியை அனுபவிக்க விரும்பியதால் அவர்களுடன் மனைவியை பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
Read More: நாயின் மீது பா.ஜ., சின்னம் பொறித்து வாக்கு சேகரித்தவர் கைது

இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: காயங்குளத்தை சேர்ந்த கிரண், குலசேகரபுரத்தை சேர்ந்த ஷீடி, பெரிநாடு பகுதியை சேர்ந்த உமேஷ், திருவல்லா பகுதியை சேர்ந்த பிளஸ்ஸரின்.

இதில் உமேஷ் மற்றும் பிளஸ்ஸரின் ஆகியோர் தன்னுடன் கட்டாய உடலுறுவு கொண்டனர் என அந்த பெண் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் நண்பர்களுடன் செக்ஸ் குறித்து பேசிய மோகத்தில் கட்டிய மனைவியை கணவரே அவரது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி