ஆப்நகரம்

கல்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு "பில்" அனுப்பிய பெண் வீட்டார்...! சமூகவலைத்தளத்தில் புலம்பல்

திருமண நிகழ்ச்சியில ஒன்றில் தன் மகனுடன் சென்று கலந்து கொண்டு அங்கு சாப்பிட்ட பெண்ணிற்கு பெண் வீட்டார் பில் அனுப்பியுள்ளதை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 16 Sep 2019, 11:50 am

ரெட்டிட் என்ற சமூகவலைத்தளத்தில் மக்கள் தங்கள் வாழ்வில் நடந்த வித்தியாசமான சம்பவங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள் இதற்கு மக்கள் பலவிதமாகப் பதிலளித்து வருவார்கள். இவ்வாறாக வரும் பல பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கும். எப்படியான ஒரு பதிவாக இருந்தது சமீபத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் பதிவு செய்திருந்த பதிவு
Samayam Tamil கல்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு பில் அனுப்பிய பெண் வீட்டார்


இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : "நான் என் 16 வயது மகனுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றேன். திருமணம் சிறப்பாக முடிந்ததும், உணவுக்கான நேரம் வந்தது. அத்தனை விருந்தினர்களும் உணவிற்காக அழைக்கப்பட்டோம். நானும் என் மகனும் உணவிற்காகச் சென்றோம். அங்குப் பெரியவர்கள் குழந்தைகள் என இரு பிரிவாக உணவு பரிமாறப்பட்டது.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட பாணியில் நீருக்கு மேலும் நீரில் முழ்கியும் செல்லும் கப்பல் வைரலாகும் புகைப்படம்

நானும் என் மகனும் பெரியவர்களுக்கான உணவையே சாப்பிட்டோம். உணவு மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் இருந்தது. பின்னர் நிகழ்ச்சியை முடித்து வீட்டிற்கு வந்த இரு தினங்களுக்குப் பின் தான் எனக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

நாங்கள் சென்ற திருமண நிகழ்ச்சியின் பெண் வீட்டார் சார்பில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஒரு பில்லும் இணைக்கப்பட்டிருந்தது.

74 வயது தாத்தாவிற்கு முளைக்கும் "பேய் கொம்பு " என்ன காரணம் தெரியுமா?

அந்த கடித்ததில் 'நீங்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சந்தோஷம், நீங்கள் உங்கள் மகனுடன் வந்திருந்தீர்கள். எங்கள் திருமண நிகழ்ச்சியில் 18 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்காகத் தனி உணவு தயார் செய்து வைத்திருந்தோம்.

உங்கள் அதை சாப்பிடாமல் உங்களுடன் சேர்ந்து பெரியவர்களுக்கான உணவையே சாப்பிட்டுள்ளார். இதற்காக கேட்ரிங் செய்தவர்கள் எங்களிடம் சார்ஜ் செய்துவிட்டனர். அதற்கான பில்லை இத்துடன் இணைத்துள்ளோம் அந்த தொகையை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.' என குறிப்பிட்டிருந்தனர்.

இணையத்தில் வைரலாகும் பிரேக் டான்ஸ்..! - சிரிப்பை அடக்க முடியாதவர்கள் பார்க்க வேண்டாம்...!

இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நான் திருமண நிகழ்ச்சியில் இருக்கும் போது குழந்தைகளுக்கான தனி உணவு என பார்த்தபோது 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு என கருதினேன். வயது குறித்த எந்த அறிவிப்பும் அங்கு இல்லை. 18 வயது என்பது இந்த கடிதம் மூலமே எனக்கு தெரிகிறது. மேலும் அங்கிருந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் என் மகன் பெரியவன் அதனால் அவனை என்னுடனேயே சாப்பிட அழைத்தேன். " என புலம்பி தள்ளியிருந்தார். இந்த போஸ்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இவரது போஸ்ட்டிற்கு பதிலளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி