ஆப்நகரம்

"நான் சிங்கம் தான் ஆனா பயப்படாதீங்க ஒண்ணும் செய்ய மாட்டேன்" - வைரலாகும் வீடியோ

பைக்கில் வந்த இருவருக்குச் சிங்க கூட்டம் வழிவிட்டுச் சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 5 Feb 2020, 4:15 pm
குஜராத் மாநிலத்தின் அம்புலி மாவட்டம் கோதியானா பகுதி கீர் காடுகளுக்கு அருகே அமைந்துள்ளது. அந்த பகுதிக்கு அடிக்கடி சிங்கங்கள் வந்து செல்வது வழக்கம். அப்படியாக ஒரு பகுதியில் சிங்கம் ஒன்று தனது இரு குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தது. அந்த பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒருவர் சிங்கத்தைப் பார்த்ததும் நிறுத்தி அதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
Samayam Tamil lion cub


அப்பொழுது எதிர்புறம் வழியாக இருவர் பைக்கில் வந்தனர். அவர்கள் சிங்கத்தைப் பார்த்ததும் பதறிப்போய் பைக்கை நிறுத்தினர். சிங்கம் இவர்களைப் பார்த்ததும். அவர்களை எதுவும் செய்யாமல் அவர்கள் செல்ல வழி விட்டு நின்றது.


Also Read : நீருக்கடியில் தேனிலவு கொண்டாடிய தம்பதி.... மனைவி மர்ம மரணம்... இறுதியாக வெளியான புகைப்படத்தில் சிக்கியது முக்கிய ஆதாரம்...!

இந்த வீடியோவை ஜார்க்கண்ட் மாநிலம் மாநிலங்களவை எம்பி பரிமல் நாத்வானி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி