ஆப்நகரம்

பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன்; போதையில் நடந்த கொடூர சம்பவம்

லண்டனை சேர்ந்த திருடன் ஒருவன் மது போதையில் பிணவறைக்கு சென்று அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவு வைத்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Jul 2019, 5:52 pm
லண்டனை சேர்ந்தவர் கசீம் குரம் 23 வயதாகும் இவர் அவ்வப்போது சிறு சிறு திருட்டு சம்பவங்களில் வந்துள்ளார். பல முறை இதற்காக போலீசில் சிக்கி சிறைக்கும் சென்றுள்ளார். சிறையில் இருக்கும்போது இவருக்கு போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் மது, கஞ்சா, மற்றும் சில வினோதமான போதை பழக்கங்களும் இருந்துள்ளது.
Samayam Tamil பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன்


ஒரு மிதபோதையில் இருந்த இவர் லண்டனில் உள்ள ஒரு பிணவறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரும் அவரை கைது செய்தனர்.

மேலும் பிணங்களின் மீது எப்படி ஒருவருக்கு செக்ஸ் ஈர்ப்பு வருகிறது என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் இந்த நிலைக்கு நெக்ரோபிலா எனவும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு இறந்த பிணங்களின் மீது தான் ஈர்ப்பே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் போதையில் இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறினார். கோர்ட் அவருக்கு தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி