ஆப்நகரம்

இறந்து போன உரிமையாளரை தேடித்திரியும் பாசக்கார நாய்... மனதை உருக்கும் சம்பவம்...!

மனிதர்களிடம் அன்பாக பழகுவதில் சக மனிதனை விட நாய்கள் சிறந்தது. ஒருவர் மீது ஒருமுறை அன்பை கொண்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த அன்பை மாற்றாமல் வைத்திருக்கும்.

Samayam Tamil 18 Mar 2019, 2:46 pm
மனிதர்களிடம் அன்பாக பழகுவதில் சக மனிதனை விட நாய்கள் சிறந்தது. ஒருவர் மீது ஒருமுறை அன்பை கொண்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த அன்பை மாற்றாமல் வைத்திருக்கும்.
Samayam Tamil உரிமையாளரை தேடித்திரியும் பாசக்கார நாய்


அந்த வகையில் சமீபத்தில் அர்ஜென்டினாவில் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த ஒருவர் தன்னுடன் ஒரு நாயையும் வளர்ந்துள்ளா்ர. இருவரும் ஒருவருக்கு ஒருவர துணையாகி இருந்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More: ஒரே நாளில் டாக்டரான தாய் மற்றும் மகள்...! எப்படி சாத்தியம்?

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்த நாள் முதல் அவர் வளர்த்த நாய் மருத்துவமனை வளாகத்தையே சுற்றி சுற்றி வந்தது. அவர் உயிரிழந்து ஒரு வாரம் ஆகியும் அந்த நாய் ஒரு நாள் நம்மை வளர்த்தவர் உடல் நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வந்து தன்னை அழைத்து செல்வார் என நம்பி சுற்றி கொண்டிருந்தது.

Read More: கணவரின் ஆண்குறி சிறிதாக இருக்கிறது என டாக்டரிடம் சொன்ன மனைவி மீது வழக்கு..!

இந்த நாய் சுற்றி வருவதை பார்த்து பலர் இந்த நாய் மற்றும் அது அதை வளர்த்தவர் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேச துவங்கினர். இந்நிலையில் தற்போது அந்த நாயை அப்பகுதியில் உள்ள நபர் ஒருவர் தத்தெடுத்து பராமரித்து வருகிறார். இன்னும் அந்த நாய் தன்னை வளர்த்த இறந்து போன முதலாளி வருவார் என நம்பிக்கொண்டு தான் இருக்கிறதாம்.

அடுத்த செய்தி