ஆப்நகரம்

எரிந்து போன ஆணுறுப்பை 8 மணி நேரம் சிகிச்சை செய்து வேலை செய்ய வைத்த டாக்டர்கள்...!

சிறுவயதில் மின்சாரம் பாய்ந்ததால் ஆணுறுப்பு செலிழந்தவருக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆணுறுப்பில் சிகிச்சை நடந்தது.

Samayam Tamil 4 Jul 2019, 7:33 pm
மத்திய பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவர் 9 வயதாக இருக்கும் போது இவருக்கு கரெண்ட் ஷாக் ஒன்று அடித்தது. அந்த கரெண்ட் ஷாக் காரணமாக இவரது உடலில் பல பாகங்கள் பாதிக்கப்பட்டது.
Samayam Tamil எரிந்து போன ஆணுறுப்பை 8 மணி நேரம் சிகிச்சை செய்து வேலை செய்ய வைத்த டாக்டர்கள்


முக்கியமாக இவரது ஆண்குறியும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக இவர் பல ஆண்டுகள் அவதிப்பட்டுள்ளார். ரமேஷ் சிறுநீர் கழிக்கும் போது வழக்கமாக மற்ற ஆண்கள் போல் நின்று கொண்டே கழிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இவர் பள்ளியில் படிக்கும் போது உடன் படிக்கும் மாணவர்களும் இவரை திருநங்கை என கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவரது பெற்றோரும் தன் மகளனை ஒரு ஆண் மகன் என இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது 25 வயதாகமு் ரமேஷிற்கு அவரது ஆண்குறியில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய மருத்துவரை அனுகினார். அப்பொழுது அவருக்கு ஆண்குறியில் அறுவை சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இருந்தாலும் மிக கடினமாக சிகிச்சையாக இது இருந்ததால் டாக்டர் தீவிர ஆலோசனை நடத்தி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

சுமார் 8 மணி நேரம் டாக்டர் அவரது கையில் இருந்த சதையை எடுத்து அவரது ஆண்குறியில் வைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமான செய்து முடித்தனர். மேலும் இது குறித்து டாக்டர் கூறும்போது தற்போது நடந்தது. முதற்கட்ட ஆப்ரேஷன் தான் எனவும் இன்னும் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை செய்த பின்பு தான் இவரது ஆண் உறுப்பு 100 சதவீதம் இயக்கத்திற்கு வரும் என கூறினார்.

அடுத்த செய்தி