ஆப்நகரம்

பாய் போல கையோடு பேத்து கொண்டு வந்த தார் சாலை! ஊழல் செய்ய ஒரு லிமிட் இல்லையா ஐயா!

மகாராஷ்டிராவில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை ஒன்று போர்வை போல கையோடு பேத்து கொண்டு வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 31 May 2023, 3:57 pm
பொதுவாக அரசியல்வாதிகள் தெர்மாகோலில் ஆரம்பித்து கைதட்டினால் கொரோனா போகும் என்று சொல்வது வரை பலவிதமான வித்தைகள் காட்டி ட்ரெண்டாவது வழக்கம். சில நேரங்களில் ஊழல் செய்து கையும் களவுமாக மாட்டி கொள்வதும் உண்டு.
Samayam Tamil Maharashtra Jalna Village


அப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜால்னா என்ற பகுதியில் அந்த ஊர் அரசு அதிகாரிகள் போட்டிருக்கும் ரெடிமேட் தார்சாலை ஊழல் பல்லை காட்டி இளித்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் இப்படி ஒரேயடியாகவா செய்வது? மக்களை இந்த அரசியல்வாதிகளும். அரசு அதிகாரிகளும் முட்டாள்கள் என்றே நினைத்து கொண்டிருக்கிறார்கள் போல.

அதற்கு சான்றாகத்தான் இந்த தார்சாலை அமைந்துள்ளது. போட்டு சில தினங்கள் தான் ஆக கூடிய அந்த தார்சாலை ஏதோ போர்வையை போல பேத்து கொண்டு வரும் வீடியோ காட்சிகள் இணையம் முழுவதும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், கோவமான அந்த கிராமப்பகுதி மக்கள் அந்த தார்ரோட்டை பேத்து மீடியாக்களிடம் முறையிட்டு வருகின்றனர். இந்த தற்காலிக தார்ரோடு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது குறித்து உங்களது கருத்துக்களை நீங்களும் பதிவு செய்யலாம்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி