ஆப்நகரம்

புலியிடம் சிக்கிய நபர் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம் - வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் புலியிடம் சிக்கிய ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2020, 3:22 pm
புமத்தியப் பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையான கைர்லாஞ்சி என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று புகுந்து விட்டுவிட்டது வயல் வெளிக்கும் புகுந்து அட்டூழியம் செய்த புலியை எல்லோரும் விரட்டத் துவங்கினர்.
Samayam Tamil Tiger man Escape


அப்பொழுது ஒருவர் எதிர்பாராத விதமாகப் புலியிடம் சிக்கிக்கொண்டார். புலி அவரை அதன் காலுக்கு இடையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அவர் புலி நம்மைக் கொல்லப் போகிறது என்ற பயத்தில் அசையாமல் படுத்திருந்தார்.

சுற்றியிருந்தவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் பயந்து போன புலி சிறிது நேரம் அவரை எதுவும் செய்யாமல் இருந்தது. தொடர்ந்து மக்கள் கூச்சல் இருந்ததால் பயந்து தலைதெறிக்க அந்த பகுதியிலிருந்து ஓடிவிட்டது.

புலி ஓடியதும் புலியிடம் சிக்கியவர் எழுந்து இயல்பாக நடந்து வந்தார். இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Also Read : கோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே செல்லும் மக்கள்... கதவுகளே இல்லாத சனி சிங்கனாப்பூர் கிராமம்...

புலியிடம் சிக்கியவர் மயிரிழையில் உயிர் தப்பிய காட்சியைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி