ஆப்நகரம்

தோழியின் காதலனை காதலித்த திருமணமான பெண்...! தோழிக்கு நடந்த விபரீதம்

அவுரங்காபத்தை அடுத்த பிசாதேவியை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் தனது பெயர் சோனாலி ஷிண்டே என்றும் தனது கணவர் சதாஷிவ் ஷிண்டே தினமும் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கெள்வதாக எழுதப்பட்டிருந்தது.

Samayam Tamil 11 Jun 2019, 6:31 pm
அவுரங்காபத்தை அடுத்த பிசாதேவியை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் தனது பெயர் சோனாலி ஷிண்டே என்றும் தனது கணவர் சதாஷிவ் ஷிண்டே தினமும் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கெள்வதாக எழுதப்பட்டிருந்தது.
Samayam Tamil தோழியின் காதலனை காதலித்த திருமணமான பெண்


இதையடுத்து சதாஷிவ் ஷிண்டவேவிடம் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் இறந்து போன சோனாலி ஷிண்டேவின் தோழி ருக்மண்பாய் மாலி என்ற பெண் காணாமல் போயுள்ளார். அதுவும் சோனாலி இறந்து போன அன்றே ருக்மண்பாய் மாலியும் காணாமல் போயுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் கோனாலி ஷிண்டே இறக்கவில்லை அவர் தனது கள்ளகாதலன் சபாதாஸ் வைஷ்ணவ் என்பவருடன் வட இந்தியாவின் பல இடங்களில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பொறி வைத்து பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சபாதாஸ் என்பவர் ருக்மண்பாயின் காதலன் என்றும், சோனாலிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் சபாதாஸ் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட சபாதாஸ் டபுள் கேம் விளையாட முடிவு செய்து ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் ருக்மண்பாயிற்கு தெரியவந்துள்ளது. இதனால் சபாதாஸ் மற்றும் சோனாலி இணைந்து ருக்மண்பாயை கொலை செய்து தீயிட்டு கொளுத்தி தங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அந்த உடலில் அருகே இவர்களே கடிதம் எழுத வைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசார் சோனாலியையும், சபாதாஸையும் கைது செய்துள்ளனர். தோழியின் காதலனை விரும்பிய திருமணமான பெண் அந்த கள்ள காதலனுடன் இணைந்து தோழியையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி