ஆப்நகரம்

நாய் என நினைத்து வீட்டில் கரடி குட்டியை வளர்த்த பெண்...!

மலேசியாவில் பிரபலமான பெண் பாடகி கோஸ்மோ, 27 வயதாகும் இவர் வீட்டில் ஒரு கரடி குட்டியை நாய் குட்டி என நினைத்து வளர்த்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 3:20 pm
கவுண்டமணி செந்தில் காமெடியில் செந்தில் கவுண்டமணியிடம் நாயின் மீது ஆட்டு தோலை போத்தி, இது ஆடு தான் என விற்றுவிடுவார். அந்த காமெடி காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது.
Samayam Tamil நாய் என நினைத்து வீட்டில் கரடி குட்டியை வளர்த்த பெண்


அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவில் பிரபலமான பெண் பாடகி கோஸ்மோ, 27 வயதாகும் இவர் வீட்டில் ஒரு கரடி குட்டியை நாய் குட்டி என நினைத்து வளர்த்துள்ளார்.

இது குறித்துஅவர் கூறும் போது தான் ஒரு இரவு காரில் வரும்போது காட்டுப்பகுதியில் ரோட்டோரமாக ஒரு நாய் குட்டி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதை அவர் மீட்டு தனது வீட்டிற்கு எடுத்து சென்று அதற்கு உணவளித்து வளர்த்து வந்ததாக கூறினார். அது சிறியதாக இருந்ததால் நாய் என தான் நினைத்ததாகவும், கரடி என தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அந்த கரடி குட்டியை மீட்டு மிருககாட்சிசாலைக்கு கொண்டு சென்றனர். அவர் வளர்த்து வருவது கரடிதான் என போலீசாருக்கு எப்படி தெரிந்தது என விசாரிக்கும்போது
அவர் நாய்குட்டி என நினைத்த தன் கரடிகுட்டிக்கு ப்ரூனோ என பெயரிட்டுள்ளார். அதனுடன் விளையாடுவது போன்ற வீடியோ, மற்றும் புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார். அதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அது கரடிகுட்டி என்பதை உணர்ந்து போலீசாருக்கு இது குறித்து புகார் அளித்தது தெரியவந்தது.

கரடி குட்டியை நாய் குட்டி என நினைத்து பெண் ஒரு வீட்டில் அதை செல்லப்பிராணியாக வளர்த்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி