மலேசியாவில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து அந்நாட்டு போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் மலேசியாவிலேயே இருப்பதாகவும் அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும், போலீசாரிடமிருந்து தப்ப சிலர் தாய்லாந்து சென்று அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றியுள்ளனர் என்றும், தெரியவந்துள்ளது.
சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று அங்குள்ள ஆண்களை திருமணம் செய்து அந்த நாட்டிலேயே குடிபெயர்ந்துவிட்டதாகவும், சிலர் மீண்டும் மலேசியாவிற்குள் வர பயந்து வெளியநாடுகளிலேயே சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசிடமிருந்து தப்பிக்க திருடர்கள் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்