ஆப்நகரம்

மார்பகத்தை கேலி செய்த ஆண், ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவரது மனைவிக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பெண்!

இளம்பெண்ணை பாலியல் ரீதியாக கேலி செய்த ஆண், அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை, அவரது மனைவிக்கே அனுப்பி ஷாக் கொடுத்த இளம்பெண், பதிவு ட்விட்டரில் வைரல்.

Samayam Tamil 13 Oct 2020, 3:02 pm
ஆன்லைனில் பெண்களை பாலியல் ரீதியாக கேலி செய்தல், சில்மிஷங்களில் ஈடுபடுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, தைரியமற்ற கோழைகள் பலர் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களால், நேருக்கு நேர் முகத்தை காண்பித்து இத்தகைய செயல்களை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் தக்க தண்டனை கிடைக்கும் என அந்த மைனர் குஞ்சுகளுக்கு தெரியும். ஆனால், ஆன்லைனில் நம்மை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்ற திமிரில் சிலர் இவ்வாறு செய்து வருகிறார்கள்.
Samayam Tamil man abused a girl in messenger she took a screenshot and shared it with his wife post goes viral on twitter
மார்பகத்தை கேலி செய்த ஆண், ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவரது மனைவிக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பெண்!


குறுஞ்செய்தி மூலம் பூஷன் எனும் நபர் ஒருவர், ஓர் இளம்பெண்ணுக்கு அவரது மார்பகங்களை குறிப்பிட்டு தகாத செய்தி அனுப்பி இருந்தார். எப்படியோ, அந்நபரின் மனைவியை கண்டுபிடித்த அந்த இளம்பெண். நீங்கள் எனக்கு அனுப்பிய அந்த குறுஞ்செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உங்கள் மனைவிக்கு அனுப்பியுள்ளேன், என்று பதில் அளிக்க. பாலியல் ரீதியாக கேலி செய்த பூஷன் அந்த இளம்பெண்ணை பிளாக் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.



இதில் கொடுமை என்னவென்றால், நல்லது நடக்கும், ஆறுதலாய் யாரேனும் பேசுவார்கள். இது போன்ற செயல்களில் இனிமேல் யாரும் ஈடுபடமாட்டார்கள் என்று எண்ணி, அந்த இளம்பெண் அந்த பதிவை இணையத்தில் பகிர்ந்தார். ஆனால், நடந்தது என்னவென்றால், மேலும் சில சில்மிஷ விஷங்கள் அவருக்கு அதே போன்ற செய்திகள் அனுப்பி, எங்கே எனது நிஜ பெயர், நான் யார் என்று கண்டுபிடி பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.



இளம்பெண்களை பாலியல் ரீதியாக இணையங்களில் கேலி செய்வதில் தான் உங்கள் ஆண்மை விறைப்பு வீறுகொண்டு இருக்கிறதா? ஆண்மை என்றால் என்னவென்று தெரியுமா? உங்களுக்கு பெண்மை பற்றியோ, பெண்களை பற்றியோ ஒரு சதவீதம் கூட தெரியாதா?உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, சகோதரி, மனைவி, மகள்களை இப்படி யாரேனும் கேலி செய்தால், இது போன்று தான் செயல்படுவீர்களா?


பூஷன் பிளாக் செய்த பிறகு, மீண்டும் அன்-பிளாக் செய்து மன்னிப்பு கூறியதாகவும், அதற்கு தான் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி