ஆப்நகரம்

தன்னிடம் சண்டை போட்டவரின் வீட்டை ரூ1 கோடி கொடுத்து வாங்கி கோபம் தீர இடித்து தரைமட்டமாக்கிய வியாபாரி

ஆந்திர மாநிலத்தில் வியாபாரி ஒருவர் தன்னிடம் சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை ரூ1 கோடி கொடுத்து வாங்கி அந்த வீட்டை தன் கோபம் தீர தரைமட்டமாக இடித்த சம்பவம் சமீபத்தில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 6:48 pm
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோட்டூரைச் சேர்ந்தவர் சேகர், டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சுமார் ரூ60 லட்சம் மதிப்பிலான 4 மாடிக் கட்டடம் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். அவரின் வீட்டிற்கு அடுத்ததாக ஒரு காலி இடம் இருந்தது.
Samayam Tamil தன்னிடம் சண்டை போட்டவரின் வீட்டை ரூ1 கோடி கொடுத்து வாங்கி கோபம் தீர இடித்து தரைமட்டமாக்கிய வியாபாரி


அந்த காலி இடத்தை வெங்ககடரமணராஜூ என்ற எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் வாங்கி அவர் அந்த பகுதியில் வீடுகட்ட நினைத்து அந்த பகுதியில் சுமார் 20 அடி வரை வானம் தோண்டினார்.

Also Read : விமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா? - வைரலாகும் புகைப்படம்

இதனால் சேரின் வீடு வலுவிழந்தது. இதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சேகர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன் சொந்த வீட்டை காலி செய்து விட்டு வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் 20 அடி பள்ளம் தோண்டியது குறித்து வெங்கடரமணராஜூவிடம் சண்டை போட்டுள்ளார்.

Also Read : இணையத்தில் டிரெண்டாகும் வணக்கம்டி மாப்ளே மீம்ஸ்...!

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடரமணராஜூ, சேகரின் ரூ60 லட்சம் மதிப்பிலான வீட்டை சுமார் ரூ1 கோடி கொடுத்து சொந்தமாக வாங்கிவிட்டார். மேலும் சேகர் தன்னிடம் வந்து சண்டை போட்டதால் ஏற்பட்ட கோபத்தில் வெங்கடரமணராஜூ பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு 40 நிமிடத்தில் 4 மாடிக் கட்டிடத்தையும் தன் கோபம் தீர தன் கண் முன்னே இடித்துத் தள்ளினார்.

Also Read : விளையாட்டின் போது கீழே விழுந்த ஹிஜாப்; எதிரணியினர் என்ன செய்தார்கள் தெரியுமா?

தன்னிடம் சண்டை போட்டதற்காக ஒருவர் ரூ1 கோடி கொடுத்து ஒரு இடத்தை வாங்கி அதை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி