ஆப்நகரம்

Singapore Airport: காரில் சென்றவர் பேன்டிற்குள் இருந்து "மியாவ்" சத்தம்; போலீசார் அதிர்ச்சி

சிங்கப்பூரில் பேன்டிற்குள் 4 பூனைக்குட்டிகளை மறைத்து வைத்து ஒருவர் மலேசியாவிற்கு கடந்த முயன்றுள்ளனர். சோதனை சாவடியில் சோதனையின் போது அவர் வசமாக சிக்கி கொண்டார். இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 11 Jan 2019, 5:48 pm
சுமார் 45 வயது மதிக்கதக்க சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் தனது காரில் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல திட்டமிட்டார். இவர் டுவஸ் என்ற சிங்கப்பூர் - மலேசியா பார்டர் பகுதியில் இமிகிரேஷன் சோதனைக்காக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.
Samayam Tamil man caught by immigration officers smiggle kittens at malaysia singapore border
man caught by immigration officers smiggle kittens at malaysia singapore border


அப்பொழுது இவரது பேன்டில் இருந்து மியாவ் என்று சத்தம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த இவரது பேன்டை கழற்ற சொல்லி பரிசோதனை செய்யும் போது இவர் பேன்டிற்குள் 4 பூனைக்குட்டிகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பொதுவாக விலக்குகளை சிங்கப்பூரில் மலேசியாவிற்கு எடுத்து செல்ல அனுமதியில்லை என்பதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் சிங்கப்பூரில் விலங்குள் பறவைகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கான முறையான லைசென்ஸ்களை பெற வேண்டும் அவ்வாறு லைசென்ஸ் பெறாமல் விலக்குள் மற்றும் பறவைகளை வளர்த்தால் 10 ஆயிரம் டாலர் அபராதம் மற்றும் 1-2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் உள்ளது.

பேன்டிற்குள் 4 பூனைகளை வைத்து ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் குறித்து சிங்கப்பூர் எல்லை செக்பாயிண்ட் அத்தாரிட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி