ஆப்நகரம்

செருப்பை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த சென்னை வாலிபர்..!

சென்னையை சேர்ந்த ஒருவர் தனது செருப்பை யாரோ திருடிவிட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Nov 2019, 10:50 am
சென்னை கீழ்பாக்கம் திவான்பகதூர் சண்முகம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கஃபீஸ். இவர் தனது வீட்டிற்கு வெளியே வைத்திருந்த 10 ஜோடி செருப்பைக் காணவில்லை எனப் போலீசில் புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil செருப்பை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த சென்னை வாலிபர்


அவர் அளித்த புகாரின் படி கடந்த சனிக்கிழமை காலை இவர் வீட்டிற்குள் செல்லும்போது வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார். ஆனால் வீட்டிற்குள்ள அவர் சென்று கதவைச் சாத்திவிட்டு சுமார் 1 மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து பார்க்கும்போது இவரது 10 ஜோடி செருப்பு மற்றும் ஷூக்கள் காணாமல் போய்விட்டது.

மேலும் தொலைந்து போன செருப்பு மற்றும் ஷூக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ60 ஆயிரம் எனவும். இதைச் செய்தது தன் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் பேச்சிலர்கள் தான் எனவும் அவர் சந்தேகிக்கிறார். இதையடுத்து போலீசார் இந்த புகாரை எடுத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர். முதற்கட்டமான இவர் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் போலீசார் தொலைந்து போன செருப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்...! சினிமாவை மிஞ்சும் கெத்து சம்பவம்...undefined

மேலும் இது குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். செருப்பைக் காணவில்லை எனப் புகார் வந்தது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

Also Read : சிறு பொந்திற்குள் ஒளிந்திருந்த பிரம்மாண்ட அரண்மனை..! இன்று வரை விலகாத மர்மம்...!

செருப்பு இவ்வளவு விலைமதிப்புள்ளது என்றால் அதை ஏன் அவர் வீட்டிற்கு வெளியே விட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இது போன்ற விசித்திரமான புகார்களுக்குப் பின்னால் வேறு விஷயம் ஒளிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி