ஆப்நகரம்

சீனாவில் திருமணத்தின் போது கதறி கதறி அழுத மாப்பிள்ளை ஏன் தெரியுமா?

சீனாவில் திருமணத்தின் போது மணமகன் கதறி கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Nov 2019, 7:41 pm
திருமணங்கள் முடிந்ததும் மணப்பெண் அவரது வீட்டை விட்டுப் பிரிவதை நினைத்து அழுவது வழக்கம் இதை நீங்கள் அனைத்து திருமண வீடுகளும் காண முடியும்.
Samayam Tamil சீனாவில் திருமணத்தின் போது கதறி கதறி அழுத மாப்பிள்ளை


இந்நிலையில் கடந்த வாரம் சீனாவில் உள்ள ஒரு சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவின் படி சீனாவின் புயாங்க் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தனது திருமண மேடையில் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தார்.

பொதுவாகத் திருமணம் முடிந்ததும் பெண் தானே அழுவார், மாப்பிள்ளை ஏன் அழுகிறார் என்று எல்லாம் பலரும் புரியாமல் முழித் நிலையில் அவர் பேசினார். அவர் தனது நண்பர்கள் 7 பேருக்குத் துணை மாப்பிள்ளையாக நின்றதாகவும், இறுதியாக தற்போது தனக்குத் திருமணம் நடந்துள்ளதாகவும்,

Also Read : இப்படியே பேசிட்டு இருந்த என்ன அர்த்தம்...! யாரு பெருசுன்னு காட்டுங்கள்

தான் துணை மாப்பிள்ளையாக நின்றபோது செய்த சேட்டைகளை தற்போது அவர்கள் தனக்குச் செய்வதாகவும். இதைப் பார்க்கும் போது தனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒரு புறம் அழுகையாகவும், ஒரு இனம் புரியாத உணர்வைத் தருவதாகவும். தான் இதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளாவதாகவும் பேசினார்.


Also Read : ஒரே போட்டோ தான் வெளிநாட்டு மீம் கிரியேட்டர்களுக்கு செம தீனி

மேலும் அவர் தனது மனைவியை மிகவும் நேசிப்பதாகவும், அவரை எக்காலத்திலும் பிரிய மாட்டேன் எனவும் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி