ஆப்நகரம்

இப்படிக்கூட உயிர் போகும்ன்னு யாருமே நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டீங்க..!

திருவண்ணாமலையில் இறைச்சி கடையில் பணியாற்றியவருக்கு ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் மரணம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக கீழே காணுங்கள்.

Samayam Tamil 3 Jan 2020, 11:02 am
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டி நாமக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை, இவர் அய்யப்பம்பாளையம் பிரிவு பட்டதரசியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
Samayam Tamil இப்படி சாவு வரும்ன்னு யாருமே நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டீங்க


இறைச்சி விற்பனை செய்யும் அந்த கடையில் வேலை முடிந்ததும் இறைச்சிவெட்ப்படும் மரத்தைச் சுத்தம் செய்துள்ளார். மின் இயந்திரத்தின் மூலம் அவர் அதைச் சுத்தம் செய்த போது அவர் கழுத்தில் மாட்டியிருந்த துணியின் நாடா ஒன்று அந்த இயந்திரத்தில் சிக்கியது.

Also Read : நள்ளிரவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து 2.6 மில்லியன் யூரோ கொள்ளை... கொள்ளையர்கள் பிடிபட்டும் பிடிபடாத பணம்...
அந்த நாடாவின் மறுமுனை அவரது கழுத்தில் சுற்றியிருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் சுற்றிய நாடா அவரது கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார்.

இந்த காட்சியில் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயிருந்தது. இதைக் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் இப்படி கூட மரணம் வருமா? என்ற ரீதியில் பேசி வருகின்றனர். ஏழுமலை மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி