ஆப்நகரம்

Tik Tok Viral : யாரு என்ன சொன்னாலும் பாசமும் நேசமும் கூட வரும்....!

மாடு வளர்ப்பவர் ஒருவர் மாட்டிற்கு கருப்பை ஊட்டி விடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 28 Jan 2020, 11:23 am
பொங்கல் விழா சூரியனுக்கானது என்றால் மாட்டுப் பொங்கல் விழா மாடுகளுக்கானது. அன்று மாட்டைக் குளிப்பாட்டி அதற்கு வேண்டியதை எல்லாம் செய்து மாட்டிற்கு முன்பு பொங்கல் வைத்து அன்று மாடுகளை வேலை செய்யாமல் ஆனந்தமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளில் பங்கு பெற வைத்து அன்று மாடுகளைச் சந்தோசமாக வைத்திருக்கும் பண்டிகை.
Samayam Tamil Maattu pongal


தமிழகத்தில் மாடுகளை வளர்பவர்கள். அதன் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருப்போம். அவர்கள் மாடுகளை தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே பார்ப்பார்கள். அந்த அளவிற்கு மாடு அவர்களும் ஒன்றோடு ஒன்றாக வாழ்வார்கள்.


Also Read : கோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே செல்லும் மக்கள்... கதவுகளே இல்லாத சனி சிங்கனாப்பூர் கிராமம்...

இப்படியாகச் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த காளைக்கு அது ஆட்டோவில் வரும் போது அதன் வளர்ப்பவர்கள் கருப்பை கடித்துக் கடித்து காளைக்கு ஊட்டி விடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ டிக்டாக்கில் வெளியாகி தற்போது சமூகவலைத்தளம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி