ஆப்நகரம்

லேண்ட்லைன் போனிற்கு வந்த சோதனையை பாத்தீங்களா? - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தில் பல நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்த லேண்ட் லைன் போனை திறந்து பார்த்த போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

Samayam Tamil 11 Jan 2019, 5:18 pm
செல்போன்கள் அதுவும் ஸ்மார்ட் போன்கள் வந்து விட்ட பின்பு லேண்ட் லைன் போன்களுக்கான பயன்பாடே உலக அளவில் குறைந்து விட்டது. சுமார் 2004-2005ம் ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது.
Samayam Tamil லேண்ட்லைன் போனிற்கு வந்த சோதனையை பாத்தீங்களா? - வைரல் வீடியோ
லேண்ட்லைன் போனிற்கு வந்த சோதனையை பாத்தீங்களா? - வைரல் வீடியோ


பலர் ஸ்மார்ட் போன்களை வாங்க துவங்கினர். இன்று ஸ்மார்ட் போன் இல்லாத நிலையே இல்லை என்று கூறுப்படுகிறது. இதனால் லேண்ட் லைன் போன்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது.

ஆனால் சிலர் லேண்ட் லைன் போன்களை அலுவலகம், மற்றும் வீட்டில் அவசர பயன்பாட்டிற்காக தேவப்படும் என்பதால் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியிலும் ஒரு குடும்பம் இப்படிதான் லேண்ட் லைன் போனை வைத்திருக்கிறது. ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தவேயில்லை.

இந்நிலையில் அவர் தங்களது வீட்டை சுத்தம் செய்ய முடிவு செய்து வெளியில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். அவர் வந்து சுத்தம் செய்யும் போது அவர்கள் இந்த லேண்ட் லைன் போனிற்குள் இருந்து ஏதோ வித்தியாமான சத்தம் வருதை கேட்டனர்.

அவர்கள் அந்த வீட்டு ஓனர்களின் அனுமதியுடன் லேண்ட் லைன் போனை திறந்து பார்க்க முடிவு செய்து திறந்து பார்த்தனர். இந்த லேண்ட் லைன் போனிற்குள் சுமார் 100க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் சிக்கி இறந்த நிலையில் இருந்துள்ளது.

இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் லேண்ட் லைன் போன்களின் பயன்பாடு எந்த அளவில் குறைந்து வருகிறது. என்பதற்கு இந்த வீடியோ பெரும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

அடுத்த செய்தி