ஆப்நகரம்

ஆபாச புத்தகங்கள், சிடிக்களை தீயில் போட்டு கொளுத்தியதால் பெற்றோருக்கு மகன் கொடுத்த நூதன தண்டனை...!

ரூ20 லட்சம் மதிப்பிலான ஆபாச புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தீயில் போட்டு கொளுத்திய பெற்றோரிடம் ரூ60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2019, 2:19 pm
அமெரிக்காவை சேர்ந்த மிச்சிகன் பகுதியை சேர்ந்தவர் சார்லி இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 2016ம் தேதி விவாகரத்தானது. இதன் பின் இவர் தனது பெற்றோருடன் வந்து வாழ துவங்கினார். சுமார் 10 மாதம் தனது பெற்றோருடன் வாழ்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
Samayam Tamil பெற்றோரிடம் ரூ 60 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த மகன்


அப்பொழுது இவரது பொருட்களை எல்லாம் பெற்றோருடனேயே விட்டு விட்டு விரைவில் வந்து எடுத்துக்கொள்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்பு அவரது பெற்றோர் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை மாற்ற திட்டமிட்டனர்.

அப்பொழுது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்லும் போது சார்லியின் ரூமில் அதிகமாக ஆபாச சிடிகள் இருந்துள்ளது. அதை பார்த்த சார்லியின் பெற்றோர் அதை தீயிட்டு அழித்துவிட்டனர்.
Read More: ஒரு நாளுக்கு 2 ஆயிரம் பிரியாணிகளை விற்கும் இந்த கடை பற்றி தெரியுமா?

அதன்பின்பு தன் பெற்றோரிடம் இது குறித்து கேட்டபோது அதை அவர்கள் அழிவிட்டதாக கூறியுள்ளரனர். இதனால் ஆத்திரமடைந்த சார்லி தனது பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக அவர் அளித்த மனுவில் தான் 12 பெட்டிகளில் ஆபாச சிடிகள், புத்தகங்களை வைத்திருந்ததாகவும், 2 பெட்டிகளில் செக்ஸ் டாய்ஸ்களை வைத்திருந்ததாகவும் அதன் மதிப்பு சுமார் 28,940 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 20 லட்சம்) எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன் பொருட்களை வைத்துக்கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருந்தால் அதை நான் வீட்டில் இருந்து செல்லும் போதே சொல்லியிருக்கவேண்டும். அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு பின்னர் மிக மோசமாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
Read More: ஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள் கைது ; என்ன காரணம் தெரியுமா?

இந்த வழக்கை கோர்ட் விசாரிக்க மறுத்துவிட்டது. இருந்தாலும் சார்லியின் தந்தை அவருக்கு பதிலளித்துள்ளார். அதில் "நீ இதை நம்புவாயா மாட்டயா என எனக்கு தெரியவில்லை. நாங்கள் இதை உனது மனநல மற்றும் உணர்வு பூர்வ ஆரோக்கியத்திற்காகவே செய்தோம். இதே உன் ரூமில் ஒரு கிலோ போதைபொருட்கள் இருந்தாலும் அதை தான் செய்திருப்போம். ஒரு நாள் இதை நீ உணருவாய்" என கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்க கோர்ட் ஏற்காத நிலையில், இதை விசாரணைக்கு ஏற்க கோரி சுமார் 44 முறைக்கும் மேலாக முறையிட்டுள்ளார். தற்போது அவர் தனது பெற்றோரிடம் இருந்து தனது ஆபாச சிடிகள், புத்தகங்கள், மற்றும் செக்ஸ் டாய்ஸ்களை அழித்ததற்காக 86,822.16 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ 60 லட்சம் ) நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கேட்டு மனு செய்துள்ளார்.

அடுத்த செய்தி