ஆப்நகரம்

கள்ள நோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டு ஜெயில்... எங்கு தெரியுமா?

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Feb 2020, 1:35 pm
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகாவை சேர்ந்தவர் பிரேமா. மூதாட்டியான இவர் பாலு செட்டி சத்திரம் என்ற பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய் வருகிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுதர்சன என்பவர் இந்த மூதாட்டியிடம் வந்து காய்கறி வாங்கியுள்ளார். ரூ300க்கு காய்கறி வாங்கிவிட்டு அதற்கு 3 ரூ100 நோட்டுகளை அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
Samayam Tamil 100 rupees


அவர் சென்ற பின்புதான் அந்த நோட்டுகள் எல்லாம் செல்லாதவை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட நோட்டுகள் என்பது தெரியவந்தது. அதன் பின் பாட்டி நோந்து போய் வருத்தத்திலிருந்தார். சுதர்சன ஏற்கனவே குறிப்பிட்ட அந்த பாட்டியை ஏமாற்றிவிட்டதால் மீண்டும் அடுத்த வாரமே சென்று ஏமாற்றத் திட்டமிட்டு மறுவாரமும் சென்று அதே ரூ300க்கு காய்கறி வாங்கி விட்டும் மீண்டும் அதே செல்லாத கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளைக் கெடுத்துள்ளார்.

இந்த முறை அந்த பாட்டி அவரை கையும் களவுமாகப் படித்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து சுதர்சன பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சுதர்சன மீது வழக்குப்பதிவு செய்து அவர் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்தி கருவிகளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோட்டில் வழக்கு நடந்தது.

Also Read : இந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்...

இந்த வழக்கிற்கான தீர்ப்பில், காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் சுதர்சனிற்கு 37 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதைக் கேட்டதும் சுதர்சனிற்கு தலையே சுற்றி விட்டது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை ரூ300 ஏமாற்றியதற்காக 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையா? என அவர் அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டார்.

தீர்ப்பின் போது சுதர்சனின் மகள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். தீர்ப்பு வெளியான பின்பு போலீசார் அவரை சிறைக்குக் கூட்டச் சென்ற போது அவரது மகள் "எங்க போறீங்கப்பா" எனகக்கேடடார். அதற்கு அவர் "அப்பா ஊசி போட்டுக்கப்போறேன்" எனச் சொல்லியுள்ளார். கள்ளநோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது பலருக்கு பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி