ஐதிராபாத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் ராபின் முகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபலமான சோமாட்டோ ஆப்பில் இரவு 10மணிக்கு டீ ஆர்டர் செய்தார். அந்த ஆர்டரை அந்நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றும் முகம்மது ஆகில் என்பவருக்கு டெலிவரி செய்யும் பொறுப்பாக சென்றது. ஆர்டர் செய்த 15 நிமிடத்தில் அந்த முகம்மது ஆகில் அந்த உணவை உரிய இடத்தில் டெலிவரி செய்தார். அந்த உணவை வாங்க வந்த முகேஷிற்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தான் இருக்கும் இடத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் உணவு டெலிவரி செய்ய வந்தவர் தனது சைக்கிளில் வந்திருந்தார். அதை பார்த்து ஆச்சரியமடைந்த முகேஷ், முகமதுவிடம் கேட்ட போது தான் கடந்த 1 ஆண்டாக சைக்கிளில் தான் உணவு டெலிவரி செய்கிறேன். இதுவரை எந்த உணவும் காலதாமதமாக டெலிவரி செய்தது இல்லை. என கூறினார். இதை கேட்டதும் முகஷிற்கு ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து அவர் முகேஷின் அனுமதியுடன் அவரை புகைப்படமெடுத்துக்கொண்டார்.
மேலும் அவர் முகம்மதுவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என விருப்பினார். அவர் முகம்மதுவிடம் உங்கள் நீண்ட நாள் ஆசை என்ன எனக் கேட்டார். அதற்கு அவர் தனக்கு ஒரு பைக் இருந்தால் சிறப்பாக இருக்கும் என பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் நடந் சம்பவத்தை விளக்கமாக எழுதி பேஸ்புக்கில் ஆன்லைன் ஃபண்ட் ரைசர் குழுவில் பகிரந்து காசை சேகரிக்க துவங்கினார். எதிர்பாராத விதமாக அதை பதிவிட்ட 12 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் அவருக்கு ரூ73 ஆயிரம் திரண்டது. இதை கண்டு ஆச்சரியமடைந்த முகேஷ் பணம் பெறுவதை உடனடியாக நிறுத்திவிட்டார். பின்பு முகம்மது ஆகிலை அழைத்து நேரில் வரவழைத்து விஷயத்தை சொன்னார்.
அவரிடம் நடந்ததை சொல்லி அவரை ஒரு பைக் ஷோரூமிற்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்கையும், கொரோனா காலம் என்பதால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதை எல்லாம் செலவு செய்தது போக மீதம் ரூ5 ஆயிரம் இருந்துள்ளது. அந்த பணத்தை அவர் கல்லூரி படிப்பு செலவிற்காக முகேஷ், ஆகிலுக்கு வழங்கினார்.
முகேஷ் கடந்த 2 ஆண்டாக சமூக பணியில் தான் இருந்துள்ளார். அவர் பல என்ஜிஓக்களுடன் இணைந்து பல சமூகபணிகளை செய்துள்ளார். தற்போது முகம்மது ஆகிலுக்கு உதவி செய்தது சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார். முகம்மது ஆகில் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்கள கமெண்டில் சொல்லுங்கள்.
மேலும் அவர் முகம்மதுவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என விருப்பினார். அவர் முகம்மதுவிடம் உங்கள் நீண்ட நாள் ஆசை என்ன எனக் கேட்டார். அதற்கு அவர் தனக்கு ஒரு பைக் இருந்தால் சிறப்பாக இருக்கும் என பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் நடந் சம்பவத்தை விளக்கமாக எழுதி பேஸ்புக்கில் ஆன்லைன் ஃபண்ட் ரைசர் குழுவில் பகிரந்து காசை சேகரிக்க துவங்கினார். எதிர்பாராத விதமாக அதை பதிவிட்ட 12 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் அவருக்கு ரூ73 ஆயிரம் திரண்டது. இதை கண்டு ஆச்சரியமடைந்த முகேஷ் பணம் பெறுவதை உடனடியாக நிறுத்திவிட்டார். பின்பு முகம்மது ஆகிலை அழைத்து நேரில் வரவழைத்து விஷயத்தை சொன்னார்.
அவரிடம் நடந்ததை சொல்லி அவரை ஒரு பைக் ஷோரூமிற்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்கையும், கொரோனா காலம் என்பதால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதை எல்லாம் செலவு செய்தது போக மீதம் ரூ5 ஆயிரம் இருந்துள்ளது. அந்த பணத்தை அவர் கல்லூரி படிப்பு செலவிற்காக முகேஷ், ஆகிலுக்கு வழங்கினார்.
முகேஷ் கடந்த 2 ஆண்டாக சமூக பணியில் தான் இருந்துள்ளார். அவர் பல என்ஜிஓக்களுடன் இணைந்து பல சமூகபணிகளை செய்துள்ளார். தற்போது முகம்மது ஆகிலுக்கு உதவி செய்தது சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார். முகம்மது ஆகில் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்கள கமெண்டில் சொல்லுங்கள்.