ஆப்நகரம்

பாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள் பீதி!

இங்கிலாந்தில் ஓர் ஆண் பாம்பினை மாஸ்க் போல கழுத்தில் சுற்றி அணிந்து பேருந்தில் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 16 Sep 2020, 3:59 pm
வடமேற்கு இங்கிலாந்தில், பேருந்தில் பயணிக்கும் போது எதை எல்லாம் மாஸ்க் போல பயன்படுத்தலாம் என ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் மான்செஸ்டர் பேருந்தில் ஓர் ஆணின் செயல்.
Samayam Tamil பாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள் பீதி!


கடந்த திங்கள் அன்று (செப்டம்பர் 15, 2020) மான்செஸ்டர் பேருந்தில் ஓர் ஆண் பயணம் மேற்கொண்டார். அவரை ஆர்மபத்தில் கண்ட சக பயணிகள், அவர் மாஸ்க் அணிவதற்கு பதிலாக ஏதோ கலர், கலரான வித்தியாசமான துணியை கழுத்தில் சுற்றியுள்ளார் என்றே எண்ணினார்கள்.

ஆனால், சக பயணிகள் ஸ்கார்ப் என கருதிய அது, நெளிவது போல தோன்றியது. பிறகு, உற்று கவனித்த போது தான், அந்த ஆண் கழுத்தில் சுற்றி இருப்பது ஸ்கார்ப் அல்லது ஒரு பாம்பு என்று தெரிந்தது.

வெள்ளை டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து பேருந்தில் பயணித்த அந்த ஆணைஆரம்பத்தில் யாரும் கவனிக்கவில்லை. பிறகு, பாம்புடன் பயணித்த ஆளை பேருந்தில் இருந்த எல்லாரும் போட்டோ, வீடியோ எடுக்க நேரிட்டது.

பேருந்தில் பயணிக்கும் போது மூக்கு, வாய் மூடி இருக்கும் வகையில் முகத்தை மாஸ்க் அணிய வேண்டும் அல்லது மாஸ்க் போன்ற ஏதேனும் பொருளோ, ஸ்கார்ப் போன்ற துணியோ கட்டாயம் அணிய வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், இந்த பொருள் தான் உடுத்த வேண்டும் என்று எந்த குறிப்பும் அதில் இல்லை. அதை சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த பெயர் அறியப்படாத நபர், பாம்பினை மாஸ்க் போல உடுத்தி வந்து பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

ட்விட்டர் போட்டோ:

கொரோனா பரவலை தடுக்க ஒரு சட்டத்தை பிறப்பித்தால், அதில் இருக்கும் சிறு ஓட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணித்த சகபயணிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளார் அந்த ஆண்.

அடுத்த செய்தி