ஆப்நகரம்

டின்டரில் 14 ஆயிரம் பெண்களுடன் மேட்ச் ஆனவர்...! அதில் ஒரு பெண் கூட செட் ஆகவில்லையாம்...!

டின்டர் டேட்டிங் ஆப்பில் 14 ஆயிரம் பெண்களுடன் மேட்ச் ஆன ஒருவர் அதில் பெண் கூட செட் ஆகாமல் இறுதியாக வெளியில் ஒரு பெண்ணை பார்த்து அவர் மீது காதலில் விழுந்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2019, 5:08 pm
நவீன டிஜிட்டல் காலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் தற்போது சாத்தியமாகியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று தான் டேட்டிங் ஆப்
Samayam Tamil டின்டரில் 14 ஆயிரம் பெண்களுடன் மேட்ச் ஆனவர்


ஆண்களும் பெண்களும் இதில் இதில் தனக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கும் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் இருவரும் பேசி டேட்டிங் செய்யலாம். இந்த ஆப் பல நிறுவனங்கள் நடத்தினாலும் டின்டர் எனும் ஆப் தான் மிக பிரபலம்

தமிழகத்தில் கூட சென்னை, கோவை போன்ற நகரங்களில் இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் இங்கு ஆண்களுக்கு மேட்ச் கிடைப்பதே கஷ்டம் தான்.

Read More: சோமாட்டோவில் இலவச ரைடு...! இப்படி யாரும் யோசிக்கவே மாட்டாங்கப்பா...!

ஆனால் "மிஸ்டர் டின்டர்" என பெயர் வாங்கும் அளவிற்கு ஸ்டேபன் பைரே டோம்லின் என்ற மாடல் ஒருவரின் டின்டர் கணக்கில் 14 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பெண்கள் மேட்ச் ஆகியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தினமும் குறைந்தது 20 மேட்ச்களையாவது பெற்றுவந்தார்.

தற்போது 14 ஆயிரம் மேட்ச்களையும் தாண்டி சென்றாலும் அவருக்கு அங்கு எந்த லவ்வும் செட் ஆகவில்லை. இவர் ஏற்கனவே செலிப்ஸ் கோ டேட்டிங் என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டவர். அப்பொழுது இவரது லுக் மற்றும் உடற்கட்டிற்காக மிக பிரபலமானவர் அதன் காரணமாகவே இவருக்கு இத்தனை மேட்ச்கள் கிடைத்துள்ளது.

இவர் இந்த 14 ஆயிரம் பேரில் 2 பேருடன் தான் டேட்டிங் செய்ததாகவும் ஆனால் அது அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை எனவும் ஏற்கனேவ ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நடாஷா என்ற பெண்ணை பார்த்துள்ளார். முதல் முறை பார்த்தபோது இவருக்கு மனதில் பற்றிக்கொண்டது.

Read More : டுவிட்டரில் கேள்வி கேட்டவருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நடிகர் மாதவன்...!

பின்பு அவரிடம் பேசி பழகி அவருடன் டேட்டிங் சென்றுள்ளார். சில மாத டேட்டிங் செய்துள்ளார். அவர்களிடையே நன்றாக செட்டாகிவிட்டதால் அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தகவலை ஸ்டேபனே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளனர். அதில் அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் முக்கியமான விஷயங்களை வீலாக் வீடியோவாக பதிவு செய்து அதை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

Read More: Bigg Boss வீட்டில் தற்கொலைக்கு முயன்ற Madumitha ? என்ன காரணம்?

டேட்டிங் ஆப்பில் 14 ஆயிரம் பெண்கள் மேட்ச் ஆகியும் அதில் யாரும் செட் ஆகாமல் வெளியில் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டது பலரை வியக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி